அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 28 எபிசோட்: வீட்டை விட்டு வெளியேறிய நிலா.. கண்ணீரில் அண்ணன்.. கடைசியில் காத்திருந்த ஆப்பு!
அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 28 எபிசோட்: அவனது அண்ணன் அவனை சமாதானப்படுத்தினான். இந்த நிலையில் மறுநாள் அண்ணன் தோசை ஊற்றிக் கொண்டிருக்க, பல்லவன் கல்லூரிக்கு ஹால் டிக்கெட் வாங்குவதற்காக கிளம்பி கொண்டு இருந்தான்.

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 28 எபிசோட்: அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில் சோழனிடம் நிலா வீட்டை விட்டு கிளம்புவதாக சொன்னாள். இதைக் கேட்ட சோழன் அவ்வளவுதானா வேறு ஏதும் இருக்கிறதா என்று கேட்டான்.
சோர்ந்து போன சோழன்
ஆனால், நிலாவோ வேறு எதுவும் இல்லை என்று சொல்ல, சோழன் மறுபடியும் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டான். உடனே நிலா சோழன் கட்டிய தாலியை நினைவுபடுத்தி, இந்த தாலியைப் பார்த்து தான் வீட்டு ஓனர் வீடு கொடுத்திருக்கிறார்.அங்கு சென்ற பின்னர் புதிதாக ஒன்றை ரெடி செய்து விட்டு இதனை மறுபடியும் கொடுக்கிறேன் என்று கூறினார். இதையடுத்து அவன் சோர்ந்து போய் உள்ளே சென்றான்.
அவனது அண்ணன் அவனை சமாதானப்படுத்தினான். இந்த நிலையில் மறுநாள் அண்ணன் தோசை ஊற்றிக் கொண்டிருக்க, பல்லவன் கல்லூரிக்கு ஹால் டிக்கெட் வாங்குவதற்காக கிளம்பி கொண்டு இருந்தான்.
இந்த நிலையில், அங்கு நிலா வந்து நிற்க, அவள் வந்த பின்னர் தான் வாழ்க்கையே சிறப்பாக இருக்கிறது. தன் வீட்டில் தன்னை தேடுவதற்கு பேசுவதற்கு ஆள் இருக்கிறது என்ற நினைப்பு வருவதாக கூறினான். இதைக் கேட்ட அனைவரும் வருத்தத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்.
ஆசீர்வாதம் வாங்கினான்
திடீரென்று கல்லூரி கிளம்ப இருந்தவன் நிலாவின் காலில் ஆசீர்வாதம் வாங்க, அவள் என்னிடம் ஆசீர்வாதம் வாங்கக்கூடாது என்று கூறினாள். ஆனாலும், அவன் கேட்ட பாடு இல்லை.
இந்த நிலையில் அவன் கல்லூரிக்கு கிளம்ப, நிலா வீட்டை விட்டு கிளம்ப தயாரானாள். அவனது அண்ணன் சாப்பிட்டு போ என்று சொன்னதையும் கேட்காமல், விறுவிறுவென கிளம்ப, அவளை சோழன் காரில் கொண்டு அவள் வாடகை எடுத்திருக்கும் வீட்டில் கொண்டு விட்டான்.
தொடர்ந்து சோழன் சகஜமாக இருக்க, சந்தேகப்பட்ட நிலா வேறு ஏதும் இல்லையா என்று கேட்டாள். அதற்கு அவன் ஒன்றும் இல்லை என்று சாதாரணமாக கூறிவிட்டான். இந்த நிலையில் நிலா கிளம்பி ஹவுஸ் ஓனரிடம் சாவியை வாங்க செல்ல, ஹவுஸ் ஓனர் உனக்கு வீடு கிடையாது என்று சொல்லி அவள் கொடுத்த டோக்கன் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார்.
இந்த நிலையில் நிலா அதற்கு காரணம் கேட்க அவரோ காலி செய் என்றால் காலி செய் என்று சொல்லி, ஒரே போடாக போட்டுவிட்டார். இந்த நிலையில், அங்கு மீண்டும் காத்துக் கொண்டிருந்த சோழனிடம் வந்தாள். அத்துடன் அவன் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறினாள். இதைக்கேட்ட சோழன் அதிர்ச்சியாகி நின்றான்.

டாபிக்ஸ்