அய்யனார் துணை சீரியல் ஜூன் 23 எபிசோட்: காலை கட்டிய சேரன்.. பல்லவன் சொன்ன பதில்..சோழனிடம் நெருங்கும் நிலா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் ஜூன் 23 எபிசோட்: காலை கட்டிய சேரன்.. பல்லவன் சொன்ன பதில்..சோழனிடம் நெருங்கும் நிலா!

அய்யனார் துணை சீரியல் ஜூன் 23 எபிசோட்: காலை கட்டிய சேரன்.. பல்லவன் சொன்ன பதில்..சோழனிடம் நெருங்கும் நிலா!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 23, 2025 11:17 AM IST

எல்லோரும் பல்லவனிடம் பேசிக் கொண்டிருக்க, பல்லவன் இனிமேல் இதுபோல நான் செய்ய மாட்டேன் என்று அனைவருக்கும் உறுதி கொடுத்தான். நிலா பல்லவனை கண்டித்தாள்.

அய்யனார் துணை சீரியல் ஜூன் 23 எபிசோட்: காலை கட்டிய சேரன்.. பல்லவன் சொன்ன பதில்..சோழனிடம் நெருங்கும் நிலா!
அய்யனார் துணை சீரியல் ஜூன் 23 எபிசோட்: காலை கட்டிய சேரன்.. பல்லவன் சொன்ன பதில்..சோழனிடம் நெருங்கும் நிலா!

பாட்டுக்கேட்ட நடேசன்

பாண்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட, வீட்டில் பாண்டி பாண்டியும் நிலாவும் பல்லவனை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், நடேசன் இதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தார். இதில் கடுப்பான பாண்டி அவர் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த ரேடியோ பெட்டியை தட்டி விட்டான். ஆனால், அவர் அதற்கும் சளைக்கவில்லை. மீண்டும் பாடலை போட்டு ராகம் பாடி கொண்டிருந்தார்.

இதை பார்த்த நிலா என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள். இன்னொரு பக்கம் பல்லவன் வீட்டிற்குள் வர பாண்டி அவனைக் கட்டிப்பிடித்து, இனிமேல் இதுபோல் செய்தால் கொன்று விடுவேன் என்று கூறி அழுதான். ஆனால், அப்பொழுதும் நடேசன் பாட்டு கேட்பதை நிறுத்தவில்லை. இதையடுத்து மீண்டும் பாண்டி அவரிடம் சண்டைக்குச் செல்ல, சோழன் அவர்தான் அப்படித்தான் என்று தெரியும் அல்லவா விட்டுவிடு என்று கூறினான்.

காலை கட்டிய சேரன்

இந்த நிலையில் எல்லோரும் பல்லவனிடம் பேசிக் கொண்டிருக்க, பல்லவன் இனிமேல் இதுபோல நான் செய்ய மாட்டேன் என்று அனைவருக்கும் உறுதி கொடுத்தான். நிலா பல்லவனை கண்டித்தாள். இரவு படுக்கும் பொழுது சேரன் பல்லவனின் காலை தன்னுடைய காலோடு சேர்த்து கட்டிக் கொண்டு சேரன் படுக்க, அவன் அதனை பார்த்து விட்டான். இதனையடுத்து எழுந்த அவன் இனிமேல் நான் இதுபோல செய்ய மாட்டேன் என்று கூறியதோடு, நீ காலை கட்டி வைத்துக் கொள். இல்லை என்றால் இரவு தூங்காமல் என்னை விழித்து விடுத்து பார்த்துக் கொண்டே இருப்பாய் என்று கூறி விட்டான். இதனால் சேரன் கட்டை அவிழ்க்காமல் அப்படியே படுத்து உறங்கினான்.

அடுத்த எபிசோடில் நிலாவுக்கு கல்லூரி சான்றிதழ் வந்துவிட்டது. இந்த நிலையில் குஷியான நிலா சந்தோஷத்தில் துள்ளி குதித்து, அதற்கு உதவிய சோழனிடம் கை கொடுங்கள் என்று சொல்ல சோழனும் சந்தோஷத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் குஷியானான். அத்தோடு எபிசோட் முடிவடைந்தது