அய்யனார் துணை சீரியல் ஜூன் 21 எபிசோட்: தொலைந்து போன பல்லவன்! - கண்கலங்கிய சேரன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் ஜூன் 21 எபிசோட்: தொலைந்து போன பல்லவன்! - கண்கலங்கிய சேரன்!

அய்யனார் துணை சீரியல் ஜூன் 21 எபிசோட்: தொலைந்து போன பல்லவன்! - கண்கலங்கிய சேரன்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 21, 2025 11:25 AM IST

அய்யனார் துணை சீரியல் ஜூன் 21 எபிசோட்: நிலாவிற்கு தான் சோகமாக இருந்தால் ஈசிஆர் பக்கத்தில் உள்ள கடற்கரைக்குச் செல்வேன் என்று பல்லவன் கூறியது ஞாபகத்திற்கு வந்தது. இந்த நிலையில் சோழனிடம் இது குறித்து சொல்ல, சோழனும் சேரனும் அங்கு சென்றனர்.

அய்யனார் துணை சீரியல் ஜூன் 21 எபிசோட்: தொலைந்து போன பல்லவன்! - கண்கலங்கிய சேரன்!
அய்யனார் துணை சீரியல் ஜூன் 21 எபிசோட்: தொலைந்து போன பல்லவன்! - கண்கலங்கிய சேரன்!

இதனால், ஒரு கட்டத்தில் மனம் உடைந்த சேரன் அழவே ஆரம்பித்து விட்டார். இன்னொரு பக்கம் நிலாவும் போன் செய்து பல்லவன் கிடைத்து விட்டானா என்று கேட்டுக்கொண்டே இருக்க, சோகம் நெஞ்சை அடைத்தது.

அலட்சியமாக பேசிய அப்பா

இதற்கிடையே வீட்டிற்கு அப்பா வந்தார். அவரைப் பார்த்த நிலா பல்லவன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை. என்னவென்று தெரியவில்லை எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறினாள். அதற்கு நடேசன் இங்கேதான் எங்கேயாவது சுற்றிக் கொண்டிருப்பான். வீட்டிற்கு வந்து விடுவான் என்று அலட்சியமாக பேச, கடுப்பான நிலா நான் எவ்வளவு சீரியஸாக பேசிக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் என்று சொல்ல, அவனுக்கு வீடு இருக்கும் இடம் தெரியும். ஆனால் நமக்கு அவன் எங்கு இருக்கிறான் என்பதுதெரியாது. அதனால், நீ அமைதியாக சென்று படு வந்து விடுவான் என்று கூறிவிட்டார்.

கண்டுபிடித்த சேரன்

இந்த நிலையில் நிலாவிற்கு தான் சோகமாக இருந்தால் ஈசிஆர் பக்கத்தில் உள்ள கடற்கரைக்குச் செல்வேன் என்று பல்லவன் கூறியது ஞாபகத்திற்கு வந்தது. இந்த நிலையில் சோழனிடம் இது குறித்து சொல்ல, சோழனும் சேரனும் அங்கு சென்றனர்.

அங்கு பல்லவன் இருந்தான். அவனை பார்த்த மறுகணத்திலேயே சேரன் அழுது கொண்டு உட்கார்ந்து விட்டார். சோழன் பல்லவனை சமாதானப்படுத்தி நீ ஏன் இங்கு வரவேண்டும். உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்று கூறினான். சேரன் உன்னை பிள்ளை போல தானே பார்த்துக் கொண்டார். பின்னால் நீ ஏன் கவலைப்பட வேண்டும் என்று கூற, அவன் சேரனை நோக்கி ஓடினான். அத்தோடு எபிசோடு முடிவடைந்தது.