அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: சோழனால் தொடர்ந்து ஏமாறும் நிலா.. அய்யனார் துணை சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: சோழனால் தொடர்ந்து ஏமாறும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: சோழனால் தொடர்ந்து ஏமாறும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Apr 21, 2025 04:32 PM IST

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: ஆசை ஆசையாக இன்டர்வியூவிற்கு தயாராகி சென்றால், அங்கு சோழனின் நண்பன் அனைத்தையும் சொதப்பியதால் நிலா ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வந்தாள்.

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: சோழனால் தொடர்ந்து ஏமாறும் நிலா.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: சோழனால் தொடர்ந்து ஏமாறும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

நிலாவை சந்தோஷப்படுத்த பொய் சொல்லும் சோழன்

இனியும் தன்னை வைத்து பொய் சொல்ல வேண்டாம். பொய்யால் கிடைக்கும் எந்த மரியாதையும் எனக்கு வேண்டாம் என்பதை திட்டவட்டமாக கூறினான். ஆனால், இதை எதையும் சோழன் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தான். இப்படி எல்லாம் செய்தால் தான் நிலாவிற்கு தன் மேல் காதல் வரும் என்றும் கூறி சமாளித்தான்.

பின் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் நிலா தான் இன்டர்வியூவிற்கு செல்வதை நினைத்து மிகவும் சந்தோஷமாக பேசினாள். அப்போது, அவளும் சேரனுக்கு நன்றி எல்லாம் சொன்னாள். பின் சோழன் அடுக்கடுக்காக சொன்ன பொய்களால் பாண்டியனுக்கும் சோழனுக்கும் சண்டை வந்தது. பின் சேரன் 2 பேரையும் தடுத்து நிறுத்தினான்.

நைட்டியால் தடுமாறிய சேரன்

அடுத்ததாக நிலாவும் சோழனும் இன்டர்வியூவிற்கு கிளம்பும் சமயத்தில் கார்த்திகா சோழன் கொடுத்த நைட்டியுடன் வீட்டிற்கு வந்தாள். சேரனிடம் அதை ஆசை ஆசையாக காட்டி எப்படி இருக்கிறது என கேட்டாள். இதைப் பார்த்த சேரன் திருதிருவென முழிக்க, நிலா, நீங்க கார்த்திகாவிர்கு வாங்கிவிட்டு கொடுக்க தயக்கப்பட்டதால் சோழன் கொடுத்தாரே அந்த நைட்டி என சொன்னதும் சேரனுக்கு நடப்பது என்ன என்பது புரிந்தது. அப்போது எதுவும் பேசாமல் நல்லா இருக்கு என்று மட்டும் பேசி அங்கிருந்து நழுவினான்.

ஏமாற்றம் அடைந்த நிலா

இன்டர்வியூவிற்கு சென்ற இடத்தில், சோழனின் நண்பன் என் அப்பா ஆபிஸிற்கு வந்ததால் இப்போ நிலாவை வீட்டிற்கு உள்ளே வர சொல்லாதே. வீட்டிற்கு கிளம்புங்கள் என்று சொல்லி விட்டான். சோழன் எவ்வளவு கெஞ்சியும் அவன் அதற்கெல்லாம் செவி கொடுக்கவே இல்லை. இதனால் ஏதேதோ சமாளித்து நிலாவை அங்கிருந்து அழைத்துச் சென்றான். இதனால் நிலா மிகவும் ஏமாற்றம் அடைந்தான்.

பூமரான சேரன்

நடந்த இந்த சம்பவத்தால் சோழன் சேரனிடம் கடுப்பில் கத்திக் கொண்டிருந்தான். இதை எல்லாம் கேட்ட சேரன் நிலாவிடம் இப்போதாவது உண்மையை சொல்ல சொல்லி சொல்கிறான். ஆனால் சோழன் சேரனை பூமர் என சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்புகிறான்.