அய்யனார் துணை சீரியல் ஜூன் 19 எபிசோட்: போட்டுடைத்த நடேசன்.. பல்லவனுக்கு தெரிய வந்த உண்மை…பதறிப்போன குடும்பம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் ஜூன் 19 எபிசோட்: போட்டுடைத்த நடேசன்.. பல்லவனுக்கு தெரிய வந்த உண்மை…பதறிப்போன குடும்பம்!

அய்யனார் துணை சீரியல் ஜூன் 19 எபிசோட்: போட்டுடைத்த நடேசன்.. பல்லவனுக்கு தெரிய வந்த உண்மை…பதறிப்போன குடும்பம்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 19, 2025 10:49 AM IST

அய்யனார் துணை சீரியல் ஜூன் 19 எபிசோட்: அந்த இடத்தில் மற்றொரு புகைப்படம் கிடைத்தது. அதில் பல்லவனை அந்த வடநாட்டுப் பெண் தூக்கி வைத்திருந்தார். இந்த நிலையில், பல்லவன் இவர் யார்? இவர் ஏன் என்னை தூக்கி வைத்திருக்கின்றார் என்று கேள்விகளை எழுப்ப, நடேசன் உள்ளே வந்தார்.

அய்யனார் துணை சீரியல் ஜூன் 19 எபிசோட்: போட்டுடைத்த நடேசன்.. 

பல்லவனுக்கு தெரிய வந்த உண்மை…பதறிப்போன  குடும்பம்!
அய்யனார் துணை சீரியல் ஜூன் 19 எபிசோட்: போட்டுடைத்த நடேசன்.. பல்லவனுக்கு தெரிய வந்த உண்மை…பதறிப்போன குடும்பம்!

சோழன்,சேரன், பாண்டியன் ஆகியோருடன் அவரது அம்மா நின்று எடுத்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் ரசித்துக் கொண்டிருந்த நிலையில், இடையே வந்த பல்லவன் நான் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் மட்டும் இல்லையே என்று கேட்டுக் கொண்டிருந்தான். இந்த நிலையில் பிறர் பதறினர்.

சமாளித்த சேரன்

இந்த நிலையில் சேரன் போட்டோக்களை தேடியதெல்லாம் போதும்; நாம் அடுத்த வேலையை பார்க்கலாம் என்று சொல்ல, அவனை நிறுத்திய பல்லவன் நீங்களெல்லாம் அம்மாவுடன் சேர்ந்து போட்டோ எடுத்திருக்கிறீர்கள்..

ஆனால், நான் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இல்லையே ஏன்? என்று மீண்டும் கேட்டான். இந்த நிலையில் சோழனும் பாண்டியும் ஏதேதோ சொல்லி சமாளித்தார்கள். ஆனால், பல்லவன் கேட்ட பாடில்லை. மீண்டும் மீண்டும் நான் அம்மாவுடன் எடுத்த புகைப்படம் எங்கே எனக் கேட்டுக்கொண்டிருந்தான்.

இதற்கிடையே, இன்னொரு புகைப்படம் அவனுக்கு கிடைத்தது. அதில் இருந்தவர் வடநாட்டு பெண் போல இருந்தார். இந்த நிலையில் பல்லவன் இவர் யார் என்று கேட்க, நிலா இவருடைய முகமும் உன்னுடைய முகமும் ஒன்று போல இருக்கிறது என்று கூறினாள். இதனையடுத்து பல்லவன் உற்றுப் பார்த்த பொழுது நிலா சொன்னது சரி என்பது தெரிய வந்தது.

போட்டோவால் வெளிவந்த உண்மை

தொடர்ந்து, அந்த இடத்தில் மற்றொரு புகைப்படம் கிடைத்தது. அதில் பல்லவனை அந்த வடநாட்டுப் பெண் தூக்கி வைத்திருந்தார். இந்த நிலையில், பல்லவன் இவர் யார்? இவர் ஏன் என்னை தூக்கி வைத்திருக்கின்றார் என்று கேள்விகளை எழுப்ப, நடேசன் உள்ளே வந்தார்.

ஒரு கட்டத்தில் நடேசனிடம் பல்லவன் சாட, நடேசன் இவர்தான் உன் அம்மா என்று கூறிவிட்டார். இந்த நிலையில் அனைவரும் அதிர்ச்சி அடைந்து, நடேசனை திட்டினர். ஆனால், நடேசன் நின்ற பாடில்லை; சேரன், சோழன், பாண்டியை பெற்ற அம்மா வேறு; உன்னைப் பெற்ற அம்மா வேறு என்று ஒரே போடாக போட்டு விட்டார். இந்த நிலையில் பொறுமை இழந்த சோழன் நடேசனை அடிக்க பாய்ந்தான். அத்தோடு எபிசோடு முடிவடைந்தது.