அய்யனார் துணை சீரியல் ஜூன் 19 எபிசோட்: போட்டுடைத்த நடேசன்.. பல்லவனுக்கு தெரிய வந்த உண்மை…பதறிப்போன குடும்பம்!
அய்யனார் துணை சீரியல் ஜூன் 19 எபிசோட்: அந்த இடத்தில் மற்றொரு புகைப்படம் கிடைத்தது. அதில் பல்லவனை அந்த வடநாட்டுப் பெண் தூக்கி வைத்திருந்தார். இந்த நிலையில், பல்லவன் இவர் யார்? இவர் ஏன் என்னை தூக்கி வைத்திருக்கின்றார் என்று கேள்விகளை எழுப்ப, நடேசன் உள்ளே வந்தார்.

அய்யனார் துணை சீரியல் ஜூன் 19 எபிசோட்: போட்டுடைத்த நடேசன்..
பல்லவனுக்கு தெரிய வந்த உண்மை…பதறிப்போன குடும்பம்!
அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் எல்லோரும் பாத்திரங்களை தேடும் பொழுது கிடைத்த பழைய போட்டோக்களை பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் அவர்களது பழைய போட்டோக்களை பார்த்து அது தொடர்பான நினைவுகளை நினைவு கூர்ந்து கலாய்த்தனர்.
சோழன்,சேரன், பாண்டியன் ஆகியோருடன் அவரது அம்மா நின்று எடுத்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் ரசித்துக் கொண்டிருந்த நிலையில், இடையே வந்த பல்லவன் நான் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் மட்டும் இல்லையே என்று கேட்டுக் கொண்டிருந்தான். இந்த நிலையில் பிறர் பதறினர்.
சமாளித்த சேரன்
இந்த நிலையில் சேரன் போட்டோக்களை தேடியதெல்லாம் போதும்; நாம் அடுத்த வேலையை பார்க்கலாம் என்று சொல்ல, அவனை நிறுத்திய பல்லவன் நீங்களெல்லாம் அம்மாவுடன் சேர்ந்து போட்டோ எடுத்திருக்கிறீர்கள்..