அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 19 எபிசோட்: சோழனை அசிங்கப்படுத்திய நிலா.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 19 எபிசோட்: சோழன் தனக்கு செய்யும் அனைத்து உதவிகளையும் நிராகரித்ததுடன், இதையெல்லாம் செய்ய நீங்கள் யார் எனவும் கேட்டுள்ளார்.

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 19 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், நிலா வீட்டில் எப்போதும் சுடிதாரே அணிந்து கொண்டு இருப்பதால், அவளுக்காக நைட்டி வாங்கி வந்தான். ஆனால், அதை நிலா வாங்க மறுத்ததுடன் தனக்கு இதெல்லாம் பிடிக்காது எனக் கூறினாள். இதனால் அப்செட் ஆன சோழன் அடுத்ததாக அவரது காரில் வந்த பெண்ணிடம் பெண்களுக்கு எந்த உடை பிடிக்கும் என்பதைக் கேட்டு நைட் ட்ரெஸ் வாங்கி வந்தான்.
நடேசனின் பிளான்
அதை நிலாவிடம் கொடுப்பதற்கு முன் பல்லவனிடம் அதை எப்படி கொடுப்பது என பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அங்கு வந்த சோழனின் அப்பா, தனக்காக தான் இந்த ட்ரெஸ்ஸை சோழன் எடுத்து வந்திருப்பதாக நினைத்து குளித்து விட்டு போட்டுக் கொள்ள முடிவு செய்தான்.
சர்ப்பிரைஸில் வந்த ட்விஸ்ட்
பின் வீட்டிற்குள் சென்ற சோழன் நிலா படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அமைதியாகவே நிற்கிறான். அதற்குள் நடேசன் குளித்துவிட்டு வர அவன் ட்ரெஸ் இல்லாமல் வந்ததை பார்த்து எல்லோரும் திட்டுகின்றனர். அதை கண்டுகொள்ளாத நடேசன், சோழன் வாங்கி வைத்திருந்த ட்ரெஸ்ஸை எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.
க்யூட்டான நடேசன்
நிலாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து கடைசியில் அது சோழனுக்கு சர்ப்ரைஸாக முடிந்தது. சோழன் ட்ரெஸ்ஸை தேடிக் கொண்டிருக்க, நடேசந் அந்த ட்ரெஸ்ஸை போட்டு வந்து நடு வீட்டில் நின்றான். அதைப் பார்த்த அனைவரும் சிரித்துக் கொண்டிருக்க, சோழனுக்கு கோபம் தாங்கவில்லை. இது நிலாவிற்கு வாங்கி வந்த ட்ரெஸ் என நடேசனை திட்டித் தீர்த்தான். பின் நிலைமையை அறிந்த நடேசன் சமாளித்து பேசத் தொடங்கினான்.
சம்பவம் செய்த நடேசன்
ஆனால், அதற்குள்ளாக நிலா இந்த ட்ரெஸ் உங்களுக்கு க்யூட்டாக இருக்கிறது என சொல்ல, நடேசன் அதை பிடித்துக் கொண்டு என் மருமகளே சொல்லிவிட்டால் இனி நான் இந்த ட்ரெஸ்ஸை தான் போடுவேன் என சொல்லி ரேம்ப் வாக் செய்தார். இதைப் பார்த்த மொத்த குடும்பமும் சிரித்தது.
கட் அண்ட் ரைட் ஆக பேசிய நிலா
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நிலா, சோழனிடம் நான் சொல்வதை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எனக்கு நீங்கள் இதெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதை செய்ய நீங்கள் யார் ? எனக்கு வேண்டும் பொருளை நானே வாங்கிக் கொள்வேன் என சொன்னதும் சோழன் முகம் வாடிப் போனது.
தயக்கமான சேரன்
அடுத்த நாள் நிலா, இன்டர்வியூவிற்கு செல்ல தயாராகும் முன் சேரனிடம் இதுபற்றி பேசினார். ஆனால், சேரனுக்கு இதுபற்றி சொன்ன போது அவன் எதுவும் தெரியாமல் முழித்தான். பின் சோழன் அந்த சமயத்தில் சமாளித்து பின் சேரனிடம் நடந்ததை விளக்கினான். இதை எல்லாம் பார்தது சேரன் மிகவும் தயங்கினான். அதற்குள்ளாக நிலா பாத்ரூமில் வழுக்கி விழுந்தாள்.

டாபிக்ஸ்