அய்யனார் துணை சீரியல் மே 10 எபிசோட்: சோழனின் சூழ்ச்சி.. நிலாவுக்கு பறந்த போன்.. பதற்றத்தில் சேரன்! அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் மே 10 எபிசோட்: சோழனிடம் நிலா டைவர்ஸ் கேட்ட நிலையில், அவன் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த போலீசிடம் விஷயத்தை சொல்லி நிலாவை மிரட்டியுள்ளான்.

அய்யனார் துணை சீரியல் மே 10 எபிசோட்: சோழனின் சூழ்ச்சி.. நிலாவுக்கு பறந்த போன்.. பதற்றத்தில் சேரன்! அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் மே 10 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், அண்ணியின் ஆலோசனை படி, சோழனிடமிருந்து எப்படியாவது டைவர்ஸ் வாங்கிவிடலாம் என்ற முடிவில் நிலா இருந்தாள். இதற்காக சோழனும் நிலாவும் வக்கீலிடம் சென்று பேசியும் ஆதார் கார்டு விஷயத்தில் ஆஃப் ஆகி வீடு திரும்பினர்.
சோழனின் திட்டம்
நிலாவை இப்படியே விட்டால் அடுத்தடுத்த வக்கீலிடம் சென்று ஏதாவது செய்து கொண்டிருப்பாள் என நினைத்த சோழன், திருவண்ணாமலையில் சோழனுக்கும் நிலாவிற்கும் கல்யாணம் செய்து வைத்த போலீஸ் வாழவந்தானுக்கு போன் செய்து, நிலாவின் வீட்டில் இருப்பவர்கள் அவளை மிரட்டி டைவர்ஸ் வாங்க வைக்க திட்டமிடுவதாகவும் இதனால், நிலாவும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லியதோடு, அவளை எப்படியாவது டைவர்ஸ் வாங்க விடாமல் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான்.