அய்யனார் துணை சீரியல் மே 10 எபிசோட்: சோழனின் சூழ்ச்சி.. நிலாவுக்கு பறந்த போன்.. பதற்றத்தில் சேரன்! அய்யனார் துணை சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் மே 10 எபிசோட்: சோழனின் சூழ்ச்சி.. நிலாவுக்கு பறந்த போன்.. பதற்றத்தில் சேரன்! அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை சீரியல் மே 10 எபிசோட்: சோழனின் சூழ்ச்சி.. நிலாவுக்கு பறந்த போன்.. பதற்றத்தில் சேரன்! அய்யனார் துணை சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published May 10, 2025 02:54 PM IST

அய்யனார் துணை சீரியல் மே 10 எபிசோட்: சோழனிடம் நிலா டைவர்ஸ் கேட்ட நிலையில், அவன் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த போலீசிடம் விஷயத்தை சொல்லி நிலாவை மிரட்டியுள்ளான்.

அய்யனார் துணை சீரியல் மே 10 எபிசோட்: சோழனின் சூழ்ச்சி.. நிலாவுக்கு பறந்த போன்.. பதற்றத்தில் சேரன்! அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் மே 10 எபிசோட்: சோழனின் சூழ்ச்சி.. நிலாவுக்கு பறந்த போன்.. பதற்றத்தில் சேரன்! அய்யனார் துணை சீரியல்

சோழனின் திட்டம்

நிலாவை இப்படியே விட்டால் அடுத்தடுத்த வக்கீலிடம் சென்று ஏதாவது செய்து கொண்டிருப்பாள் என நினைத்த சோழன், திருவண்ணாமலையில் சோழனுக்கும் நிலாவிற்கும் கல்யாணம் செய்து வைத்த போலீஸ் வாழவந்தானுக்கு போன் செய்து, நிலாவின் வீட்டில் இருப்பவர்கள் அவளை மிரட்டி டைவர்ஸ் வாங்க வைக்க திட்டமிடுவதாகவும் இதனால், நிலாவும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லியதோடு, அவளை எப்படியாவது டைவர்ஸ் வாங்க விடாமல் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான்.

நிலாவை எச்சரித்த போலீஸ்

இதையடுத்து, வாழவந்தான் நிலாவுக்கு போன் செய்து, சோழன் எப்படி பார்த்துக் கொள்கிறான் என்றெல்லாம் கேள்வி கேட்டார். பின், டைவர்ஸ் வாங்க வக்கீலிடம் சென்றது பற்றியும் கேட்டு, தனக்கு இந்த விவரத்தை அளித்ததே அந்த வக்கீல் தான். இது போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கல்யாணம் அதனால் எந்த வக்கீலிடம் போனாலும் எங்களுக்கு தான் போன் வரும். அதனால் டைவர்ஸ் என்ற பேச்சையே எடுக்க கூடாது என்று மிரட்டினார்.

மழுப்பிய சோழன்

இதைக் கேட்ட நிலா, பயந்து போய் சோழனிடம் வந்து சொல்ல, அவன் தன்னை இன்ஸ்பெக்டரும் மிக கேவலமாக திட்டியதாகவும் சொல்லி பில்டப் கொடுத்தான். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த பாண்டியன், நிலாவிற்கு ஏதோ பிரச்சனை எனத் தெரிந்து அவளிடம் வந்து கேட்டான். அப்போது சோழன் அவனை அசிங்கப்படுத்தினான். இதெல்லாம் அடங்குவதற்குள், அடுத்த பிரச்சனை வந்தது.

சேரனை எச்சரித்த பெரியப்பா

கார்த்திகாவிற்கு வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வரும் நிலையில், நடேசனின் அண்ணன் வீட்டிற்கு வந்து சேரனையும் வீட்டில் இருக்கும் அத்தனை பேரையும் எச்சரித்தான். கார்த்திகாவிற்கு கல்யாணம் நடக்க போகிறது. இந்த வீட்டில் இருந்து யாராவது அங்கு வந்து கார்த்திகாவிடம் பேசவோ பழகவோ கூடாது என எச்சரித்தார்.

பெரியப்பாவை மிரட்டிய பாண்டியன்

இதைக் கேட்ட பாண்டியன், நீங்க முதல்ல உங்க பொன்ன அடக்கி வைங்க. அவங்க தான் இங்க வர்றாங்க. நாங்க யாரும் உங்க வீட்டு பக்கம் வர்றதே கிடையாது என கூறியதுடன் போலீஸ் ஸ்டேஷனில் சொன்னது எல்லாம் மறந்து போச்சா என்றும் கேட்டு மிரட்டினான்.