அய்யனார் துணை சீரியல் மே 5 எபிசோட்: கஸ்தூரியில் பிறந்த கலகம்.. கம்பி எண்ணும் தம்பிகள்.. நின்று ஆடும் நிலா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் மே 5 எபிசோட்: கஸ்தூரியில் பிறந்த கலகம்.. கம்பி எண்ணும் தம்பிகள்.. நின்று ஆடும் நிலா!

அய்யனார் துணை சீரியல் மே 5 எபிசோட்: கஸ்தூரியில் பிறந்த கலகம்.. கம்பி எண்ணும் தம்பிகள்.. நின்று ஆடும் நிலா!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 05, 2025 11:13 AM IST

அய்யனார் துணை சீரியல் மே 5 எபிசோட்: கஸ்தூரி எங்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். எங்கள் குடும்பத்திற்கு இடையே பேச்சு வார்த்தை இல்லை என்றாலும், கஸ்தூரியிடம் நாங்கள் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தோம் என்று சொல்ல, போலீஸ் யோசிக்க ஆரம்பித்தனர்.

அய்யனார் துணை சீரியல் மே 5 எபிசோட்: கஸ்தூரியில் பிறந்த கலகம்.. கம்பி எண்ணும் தம்பிகள்.. நின்று ஆடும் நிலா!
அய்யனார் துணை சீரியல் மே 5 எபிசோட்: கஸ்தூரியில் பிறந்த கலகம்.. கம்பி எண்ணும் தம்பிகள்.. நின்று ஆடும் நிலா!

அவருக்கு சப்போர்ட்டாக அவரது மகன்களும் தாறுமாறாக பேச ஆரம்பித்தனர். இந்த நிலையில் உள்ளே புகுந்த போலீஸ், என் கண் முன்னே இப்படி சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என்று சொல்லி இரு தரப்பையும் அடக்கினார். தொடர்ந்து போலீஸ் சேரனையும் அவனது தம்பிகளையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதில் கடுப்பான சேரனின் அப்பா, மீண்டும் கஸ்தூரின் அப்பாவை வீட்டிற்கு சென்று சண்டையிட்டார்.

இந்த நிலையில் அவருக்கு பின்னால் நிலாவும் வந்து நின்றாள். இவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க, நிலா கஸ்தூரியிடம் ஜன்னல் வழியாக பேசி நிலைமையை கூறினாள். ஆனால், கஸ்தூரியோ அழுது தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையை வெளிப்படுத்தினாள். இந்த நிலையில் காவல் நிலையம் சென்ற நிலா, போலீசாரிடம் தான் சம்பவத்தன்று அங்கு தான் இருந்ததாகவும் அப்படியான ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் கூறினாள்.

போலீஸ் அதனை நம்ப மறுக்க, நீங்கள் ஒரு தரப்பில் மட்டுமே விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். நீங்கள் அவர்கள் பக்கமும் விசாரணை நடத்த வேண்டும். மேலும் கஸ்தூரி எங்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். எங்கள் குடும்பத்திற்கு இடையே பேச்சு வார்த்தை இல்லை என்றாலும், கஸ்தூரியிடம் நாங்கள் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தோம் என்று சொல்ல, போலீஸ் யோசிக்க ஆரம்பித்தனர்.

தொடர்ந்து போலீஸ் நீங்கள் யார் என்று நிலாவை நோக்கி கேட்க தான் சோழனின் மனைவி என்று கூறினாள். இதை கேட்ட தம்பிகள் ஆசுவாசமடைந்தனர்; தொடர்ந்து நிலா நிலைமையை விளக்க, அவர்கள் நிலாவை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தனர்.