அய்யனார் துணை சீரியல் மே 5 எபிசோட்: கஸ்தூரியில் பிறந்த கலகம்.. கம்பி எண்ணும் தம்பிகள்.. நின்று ஆடும் நிலா!
அய்யனார் துணை சீரியல் மே 5 எபிசோட்: கஸ்தூரி எங்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். எங்கள் குடும்பத்திற்கு இடையே பேச்சு வார்த்தை இல்லை என்றாலும், கஸ்தூரியிடம் நாங்கள் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தோம் என்று சொல்ல, போலீஸ் யோசிக்க ஆரம்பித்தனர்.

அய்யனார் துணை சீரியல் மே 5 எபிசோட்: கஸ்தூரியில் பிறந்த கலகம்.. கம்பி எண்ணும் தம்பிகள்.. நின்று ஆடும் நிலா!
அய்யனார் துணை சீரியல் மே 5 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம், சேரனின் வீட்டிற்கு போலீஸ் வந்து, கஸ்தூரியின் அப்பாவை அடித்ததற்காக சேரன் உட்பட அவர்களது தம்பிகள் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்தது. ஆனால், சேரனின் அப்பாவோ அவர்களை விடமாட்டேன் என்று சொல்லி போலீஸ் உடன் வந்திருந்த கஸ்தூரியின் அப்பாவிடம் சண்டைக்கு சென்றார்.
அவருக்கு சப்போர்ட்டாக அவரது மகன்களும் தாறுமாறாக பேச ஆரம்பித்தனர். இந்த நிலையில் உள்ளே புகுந்த போலீஸ், என் கண் முன்னே இப்படி சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என்று சொல்லி இரு தரப்பையும் அடக்கினார். தொடர்ந்து போலீஸ் சேரனையும் அவனது தம்பிகளையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதில் கடுப்பான சேரனின் அப்பா, மீண்டும் கஸ்தூரின் அப்பாவை வீட்டிற்கு சென்று சண்டையிட்டார்.