அயலி சீரியல் ஜூன் 3 எபிசோட்: கடத்தப்படும் குழந்தை.. அம்மாவின் மீதான களங்கத்தை போக்க போராடும் நாயகி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அயலி சீரியல் ஜூன் 3 எபிசோட்: கடத்தப்படும் குழந்தை.. அம்மாவின் மீதான களங்கத்தை போக்க போராடும் நாயகி

அயலி சீரியல் ஜூன் 3 எபிசோட்: கடத்தப்படும் குழந்தை.. அம்மாவின் மீதான களங்கத்தை போக்க போராடும் நாயகி

Aarthi Balaji HT Tamil
Published Jun 03, 2025 12:30 PM IST

அயலி சீரியல் ஜூன் 3 எபிசோட்: அயலி சீரியலின் முதல் எபிசோடில் இந்திராணி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அயலி சீரியல் ஜூன் 3 எபிசோட்: கடத்தப்படும் குழந்தை.. அம்மாவின் மீதான களங்கத்தை போக்க போராடும் நாயகி
அயலி சீரியல் ஜூன் 3 எபிசோட்: கடத்தப்படும் குழந்தை.. அம்மாவின் மீதான களங்கத்தை போக்க போராடும் நாயகி

அதாவது இந்திராணியும் அவளது கணவர் செழியனும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்க செழியன் குழந்தையை பார்ப்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வருகிறான். இதற்கிடையில் ஒரு கும்பல் குழந்தையை காரில் கடத்தி சென்று விடுகிறது.

குழந்தையை காரில் கடத்திய கும்பல்

குழந்தையை காணாததால் காளியப்பன் நீதானே காரணம் என்று செழியன் மீது பழி சுமத்த இந்திராணி அவர் இதுக்கு காரணமாக இருக்க மாட்டார் என்று சொல்லி சிசிடிவி காட்சிகளை சோதனையிடுகின்றனர். அப்போது குழந்தையை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது தெரிய வருகிறது.

இதையடுத்து அந்த கும்பல் இந்திராணிக்கு போன் செய்து குழந்தை உயிரோடு வேண்டுமானால் 1 கோடி பணம் வேண்டும், போலீசுக்கு போகாமல் பணத்துடன் வர சொல்லி மிரட்டல் விடுகின்றனர். ஆனாலும் இந்திராணி கண்ணீருடன் போலீஸ் ஸ்டேஷன் கிளம்புகிறாள்.

அடுத்து அயலியும் அவளது நண்பன் சிவாவும் வெளியே கிளம்ப அப்போது ஜமுனா ஆகியோர் கோவில் திருவிழாவிற்கு கிளம்ப அப்போது சிவா தடுத்து ரித்திகா கையில் இருந் பானை உடைந்து விட சிவாவை அநாதை பையன் என மோசமாக திட்டி கோபப்படுகின்றனர். ஜமுனா அயலியிடம் போய் வேற பானையை வாங்கிட்டு வா என்று அனுப்பி விடுகிறாள்.

அம்மா மீது விழுந்த களங்கத்தை போக்க வேண்டும்

இதையடுத்து சிவாவும் அயலியும் ஸ்கூலுக்கு வருகின்றனர், ஒரு டார்க் ரூமில் இருக்க அப்போது போலீஸ் அதிகாரியிடம் இருந்து ஒரு போன் கால் வருகிறது, இந்திராணி குழந்தையை மீட்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதை சரியாக செய்தால் ப்ரோமோஷன் கிடைக்கும் என்று சொல்ல அயலி தனக்கு ப்ரோமோஷன் எல்லாம் வேண்டாம், என்னுடைய அம்மா மீது விழுந்த களங்கத்தை போக்க வேண்டும் என்பதை சொல்கிறாள்.

பிறகு இருவரும் குழந்தையை கடத்தி வைத்திருக்கும் இடத்தை நோக்கி கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.