கடைசிக்கட்ட நெருக்கடி.. நின்று ஆடிய ராகுல்..சாம்பியனான இந்தியா!- கர்ப்பிணி உடம்போடு ஹார்ட்டினை பறக்க விட்ட மனைவி!
கே.எல்.ராகுலின் மனைவியும், நடிகையுமான அதியா ஷெட்டி எமோஷனலான பதிவொன்றை பதிவிட்டு இருக்கிறார்.

ஐசிசி சாம்பியன்ஸ் 2025 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் ஆனது. கடைசிக்கட்ட நெருக்கடியில் கே.எல்.ராகுலும், ஜடேஜாவும் நிதானமாக விளையாடி அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்தனர். இந்த நிலையில் கே.எல்.ராகுலின் மனைவியும், நடிகையுமான அதியா ஷெட்டி எமோஷனலான பதிவொன்றை பதிவிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில், கர்ப்பிணி உடம்போடு கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய கணவர் விளையாடுவதை பார்த்து ரசிக்கும் போட்டோவை பகிர்ந்த அவர், ஹார்ட் எமோஜியை பறக்கவிட்டு இருக்கிறார்.
அதியா மற்றும் கே.எல்.ராகுலின் உறவு
கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் ஜனவரி 23, 2023 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி, கடந்த ஆண்டு அதியா கர்ப்பமாக இருக்கும் அறிவித்து, தாங்கள் பெற்றோராக மாற இருக்கும் விஷயத்தை கூறினார்கள்.
அதில், “எங்கள் அழகான ஆசீர்வாதம் விரைவில் வருகிறது. 2025” என்று குறிப்பிட்டு இருந்தனர். 2015 ஆம் ஆண்டில், ஹீரோ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அதியா, முபாரகன் மற்றும் மோட்டிச்சூர் சக்னச்சூர் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்தியா ஜெயித்தது எப்படி?
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஃபைனல் மேட்ச்சில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. 252 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி கண்டது. 6 விக்கெட் இழப்புக்கு 49 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.
இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் கேப்டன் ரோஹித் சர்மா இந்த மேட்ச்சில் பொறுப்புடன் விளையாடி அரை சதம் எடுத்தார். அவர் 3 சிக்ஸர்கள், 7 ஃபோர்ஸ் விளாசி அசத்தினார். 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தபோது ரவீந்திரா பந்துவீச்சில் ஸடம்பிங் ஆனார்.
கில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி எதிர்பாராதவிதமாக 1 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் அடிக்க நெருங்கிய நிலையில், சான்ட்னர் வீசிய பந்தில் கேட்ச் ஆகி நடையைக் கட்டினார். அவர் 62 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் நிதானமாக செயல்பட்ட போதிலும் தூக்கி அடிக்க முயன்றபோது 29 ரன்களில் அவுட்டானார். கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடினர். ஹர்திக் கடைசி நேரத்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 18 ரன்கள் எடுத்திருந்தார் ஹர்திக். பின்னர் ஜடேஜா வந்தார். வின்னிங் ஷாட் அடித்து அணியை ஜெயிக்க வைத்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்