‘பரியேறும் பெருமாள் படத்தை மிஸ் செய்ததிற்கு வருத்தப்பட வில்லை..’ - டி.என்.ஏ ஆடியோ வெளியீட்டு விழாவில் அதர்வா பேச்சு!
மாரி செல்வராஜ் சார்.. இப்படிப்பட்ட பிசியான நேரத்தில் நீங்கள் எங்களுக்காக இங்கே வந்திருப்பதற்கு நன்றி. நான் இங்கே டி என் ஏ படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும் என்று நினைத்தேன். - அதர்வா பேச்சு!

‘பரியேறும் பெருமாள் படத்தை மிஸ் செய்ததிற்கு வருத்தப்பட வில்லை..’ - டி.என்.ஏ ஆடியோ வெளியீட்டு விழாவில் அதர்வா பேச்சு!
டி.என்.ஏ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ், ராஜூ முருகன், கார்த்திக் நேத்தா, பாலாஜி சக்திவேல், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மிஸ் ஆன பரியேறும் பெருமாள்
இந்த நிகழ்வில் நடிகர் அதர்வா பேசியதாவது, ‘மாரி செல்வராஜ் சார்.. இப்படிப்பட்ட பிசியான நேரத்தில் நீங்கள் எங்களுக்காக இங்கே வந்திருப்பதற்கு நன்றி. நான் இங்கே டி என் ஏ படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு முன்னதாக பேசிய மாரி செல்வராஜ் ஒரு பெரிய பாமை போட்டு சென்று விட்டார். பரதேசி படம் முடித்த பிறகு எனக்குள் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன.