Arunraja Kamaraj: ‘என்ன காதலிச்ச முதல் பொண்ணு.. அவ்வளவு அடிதடி.. அவ இல்லாம..’ - அருண்ராஜா காமராஜ்!
நான் பல பேரை ஒருதலையாக காதலித்து இருக்கிறேன். உண்மையில் என்னை காதலித்த பெண் என்றால், அது சிந்துஜா தான். எங்களுக்குள் நிறைய பிரேக்கப் நடந்து இருக்கிறது. ஒரே பெண்ணுடன் 10, 15 தடவை எல்லாம் எனக்கு பிரேக்கப் ஆனது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் கனா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி, லேபிள் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவரது காதல் மனைவி சிந்துஜா. இவர் கொரோனா தொற்று ஏற்படு சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இந்த நிலையில் தன்னுடைய மனைவி பற்றி ரெட்நூல் சேனலுக்கு அருண்ராஜா அண்மையில் பேட்டி அளித்திருக்கிறார்.
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “நான் பல பேரை ஒருதலையாக காதலித்து இருக்கிறேன். உண்மையில் என்னை காதலித்த பெண் என்றால், அது சிந்துஜா தான். எங்களுக்குள் நிறைய பிரேக்கப் நடந்து இருக்கிறது. ஒரே பெண்ணுடன் 10, 15 தடவை எல்லாம் எனக்கு பிரேக்கப் ஆனது.
பிரேக் அப் ஆகும் மீண்டும் நாங்கள் சேர்வோம். மீண்டும் பிரேக்கப் ஆகும். மீண்டும் நாங்கள் சேர்வோம். எங்களுக்குள் அடிதடி எல்லாம் நடந்திருக்கிறது. அது என் வாழ்வினுடைய ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் அடுத்த முறை பேசும் போது, அப்படியான சண்டை நடந்தது போலவே நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம். ஒரு கட்டத்தில் எங்கள் இரண்டு பேருக்குமே புரிந்தது. என்னதான் எங்களுக்குள் சண்டை வந்தாலும், ஒருவர் இல்லாமல் ஒருவரால் இருக்க முடியாது என்பது.
காதலிக்கும் பொழுதே அவ்வளவு சண்டைகள் நடந்திருக்கிறது என்றால் கல்யாணத்துக்கு பின்னர் எவ்வளவு சண்டைகள் நடந்து இருக்கும் என்று நீங்கள் யோசித்துக் கொள்ளுங்கள். ஒரு கட்டத்தில் எங்களுக்குள் ஏன் இவ்வளவு சண்டைகள் வருகிறது என்பதை கொரோனா காலக் கட்டத்தில் தான் புரிந்து கொண்டோம்.
எங்கள் இருவருக்கும் இடையேயும் அதிகமான எதிர்பார்ப்பு அதிகமான அன்பு இருப்பதே, மூலக்காரணம் என்பது புரிந்தது.எங்கள் இருவருக்கும் அது புரிந்த பொழுது, ஐயோ இவ்வளவுதானா.. இது தெரியாமல் தான் நாம் இவ்வளவு கஷ்டப்பட்டோமா என்றெல்லாம் பேசியிருக்கிறோம். எங்கள் வீட்டில் என்ன இருக்கிறது?, எவ்வளவு காசு வேண்டும் உள்ளிட்ட எந்த விவரங்களும் எனக்குத் தெரியாது. அனைத்தையும் அவர் தான் பார்த்துக் கொண்டார்.
கொரோனா காலத்தில் அவ்வளவு புரிதலோடு நெருங்கிய பழகி இருந்தோம். இதனால் அடுத்ததாக ஷூட்டிங் சென்ற பொழுது அவர் இல்லாமல் எனக்கு தூக்கம் வரவில்லை. அதனால் அவரை படப்பிடிப்பிற்கே வர வைத்தேன் அதனை தொடர்ந்து அவர் இறந்து போனார். படத்தின் அடுத்த ஷெடியூலுக்கு அவர் இல்லாமல் நான் சென்றேன்” என்று பேசினார்.

டாபிக்ஸ்