‘நான் மருத்துவமனைக்குச் செல்ல காரணம் இது தான்..’ ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது இது தான்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘நான் மருத்துவமனைக்குச் செல்ல காரணம் இது தான்..’ ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது இது தான்!

‘நான் மருத்துவமனைக்குச் செல்ல காரணம் இது தான்..’ ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது இது தான்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 16, 2025 05:59 PM IST

ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைப் பற்றியும், சாய்ரா பானுவிடமிருந்து பிரிந்ததைப் பற்றியும் பேசி இருக்கிறார்.

‘நான் வாழணும்னு அவங்க நினைச்சாங்க’..மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? - முதன்முறையாக சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!
‘நான் வாழணும்னு அவங்க நினைச்சாங்க’..மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? - முதன்முறையாக சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்! (AFP)

ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமீபத்திய உடல்நல பயம்

உடல்நல பயம் குறித்து பேசிய ரஹ்மான், தனது சொந்த மஸ்தி (குறும்பு) தான் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது என்றார். அது தொடர்பாக பேசிய அவர், 'நான் உண்ணாவிரதம் இருந்தேன்; சைவமாக மாறிவிட்டேன். இரைப்பையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

அடுத்த அனைத்தும் எனக்கு அனுப்பப்பட்ட பத்திரிகை செய்தியில்தான் தெரிந்து கொண்டேன். இருப்பினும் மக்களிடமிருந்து பல அழகான செய்திகளைப் பெற்றதும், நான் வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது’ என்று பேசினார்.

நான் என் ஏற்ற தாழ்வுகளை எதிர்கொண்டேன்

மேலும் தன் பர்சனல் வாழ்க்கை சம்பந்தமான விஷயங்கள் தலைப்பு செய்தியாவது குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ‘ இது மனிதாபிமானம். மனிதனாக உணராத ஒருவரை நீங்கள் சில நேரங்களில் வெறுக்க முனைகிறீர்கள். நான் என் ஏற்ற தாழ்வுகளை எதிர்கொண்டேன்; அதுதான் உண்மை. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு குணம் இருக்கிறது.

அவரவர்கள் தங்கள் வீட்டில் ஒரு சூப்பர் ஹீரோ. ஆனால் நான் என் ரசிகர்களால் ஒரு சூப்பர் ஹீரோவாக்கப்பட்டேன். இதனால்தான் எனது வரவிருக்கும் சுற்றுப்பயணத்திற்கு 'அதிசயம்' என்று பெயரிட்டுள்ளேன். ஏனென்றால் மக்களிடமிருந்து எனக்கு இவ்வளவு அன்பும், ஆசீர்வாதங்களும் கிடைப்பது ஒரு அதிசயம்' என்று பேசினார்.

திருமண வாழ்க்கை

29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக கடந்த ஆண்டு நவம்பரில் அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தார். இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், திருமணமான பல ஆண்டுகளுக்குப் பிறகு, சாய்ரா தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார்.

அவர்களின் உறவில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி அழுத்தத்திற்குப் பிறகு இந்த முடிவு வருகிறது. ஒருவருக்கொருவர் ஆழமான அன்பு இருந்தபோதிலும், பதட்டங்களும் சிரமங்களும் தங்களுக்கிடையில் கடக்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை இந்த தம்பதி கண்டறிந்துள்ளது, இந்த நேரத்தில் இரு தரப்பினரும் அதை நிரப்ப முடியாது என்று உணரவில்லை.’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் விக்கி கௌஷலின் சாவா படத்திற்கு இசையமைத்து இருந்தார். சர்ச்சைக்குரிய விமர்சனங்களைப் பெற்ற இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் 800 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இசையமைப்பாளர் தனது ‘வொண்டர்மென்ட்’ சுற்றுப்பயணத்திற்காக அமெரிக்காவின் 18 நகரங்களுக்கு செல்ல உள்ளார். ரஹ்மான் தனது சுற்றுப்பயணத்தை மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் மே 3 ஆம் தேதி வேவ்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக தொடங்குகிறார்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்கும் இவர், 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம், பிசினஸ், விளையாட்டு, அரசியல், தேசம் - உலகம், பொழுது போக்கு உள்ளிட்ட துறைகளில் கட்டுரைகள் எழுதும் திறமை கொண்ட இவர், முன்னதாக புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பொழுது போக்கு செய்திகளை வழங்கி வருகிறார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஆகும். திரைப்படங்கள் பார்ப்பது, நாவல்கள் படிப்பது, சிறுகதைகள் எழுதுவது, சினிமா சார்ந்த உரையாடல்கள் கேட்பது, நீண்ட தூர பைக் பயணங்கள், பழமையான கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வது உள்ளிட்டவை இவரது பொழுது போக்கு ஆகும்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.