இசைப்புயலை வாட்டும் மன உளைச்சல்.. இனி சினிமாவிற்கு பிரேக்.. அதிரடி முடிவெடுத்தாரா ஏ.ஆர். ரஹ்மான்?
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடும் மன உளைச்சலில் இருப்பதால் அவர் இனி சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அவரது மகள் கதீஜா மிகக் காட்டமாக பதிலளித்துள்ளார்.

இசைப்புயலை வாட்டும் மன உளைச்சல்.. இனி சினிமாவிற்கு பிரேக்.. அதிரடி முடிவெடுத்தாரா ஏ.ஆர். ரஹ்மான்?
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிய உள்ளதாக அவரது மனைவி சாய்ரா பானு, வழக்கறிஞர் மூலமாக அறிவித்தார். இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பலரும் அடுத்தடுத்த வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர்.
ஏ.ஆர்.ரஹ்மானை சுற்றும் வதந்திகள்
ஏ.ஆர்.ரஹ்மான வேலை வேலை என இருந்ததால் அவர் குடும்பத்தை கவனிக்க தவறி விட்டார். அவர், மனைவியுடன் நேரம் செலவிடுவது குறைந்துவிட்டது.
மகளுக்கு திருமணம் முடித்து வைத்ததால் தன் கடமை முடிந்ததாக இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் பேஸிஸ்ட் மோகினி டே உடன் உறவில் இருக்கிறார் என எண்ணற்ற வதந்திகள் உலா வரத் தொடங்கின.