Anurag Kashyap: ‘எல்லாரும் பயப்பட்றாங்க.. என்னாலலெல்லாம் அவர் கூட வேலை பார்க்க முடியாது’ - அனுராக் காஷ்யப்
Anurag Kashyap: நமது நாடு ஹீரோக்களை வழிபடும் நாடாக இருக்கிறது. நாம் பல விஷயங்களை இழந்து, சுயமரியாதை மற்றும் நம்பிக்கைத்தன்மையில் மிகவும் குறைவாக இருக்கிறோம். நமக்கு ஹீரோக்கள் தேவை. - அனுராக் காஷ்யப்

Anurag Kashyap: ‘எல்லாரும் பயப்பட்றாங்க.. என்னாலலெல்லாம் அவர் கூட வேலை பார்க்க முடியாது’ - அனுராக் காஷ்யப்
ஷாருக்கானை வைத்து படம் எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் பதிலளித்திருக்கிறார்.
ஷாருக்கானை வைத்து படம் எடுப்பீர்களா?
இது குறித்து ஹ்யூமன்ஸ் ஆஃப் சினிமா யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “ நமது நாடு ஹீரோக்களை வழிபடும் நாடாக இருக்கிறது. நாம் பல விஷயங்களை இழந்து, சுயமரியாதை மற்றும் நம்பிக்கைத்தன்மையில் மிகவும் குறைவாக இருக்கிறோம். நமக்கு ஹீரோக்கள் தேவை.
நமது திரைப்படங்களில் ஏன் கற்பனைக்கு மிஞ்சிய ஹீரோக்கள் இருக்கிறார்கள். திரைப்படங்களில் சூப்பர் ஹீரோக்களாக நடிக்கும் போது, தங்களது முகத்தை மறைக்காத நடிகர்கள், நம் நாட்டில்தான் இருக்கிறார்கள். அவர்களது முகமூடிகள் மிகவும் சிறியதாக இருக்கும். ஏனென்றால் அவர்கள், அவர்களின் முகங்களைக் காண்பிப்பது இங்கு முக்கியம்." என்றார்.