அண்ணா சீரியல் ஏப்ரல் 24 எபிசோட்: சண்முகம் மீது சந்தேகம் கொள்ளும் பரணி.. சட்டையை பிடித்த முத்துப்பாண்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் ஏப்ரல் 24 எபிசோட்: சண்முகம் மீது சந்தேகம் கொள்ளும் பரணி.. சட்டையை பிடித்த முத்துப்பாண்டி!

அண்ணா சீரியல் ஏப்ரல் 24 எபிசோட்: சண்முகம் மீது சந்தேகம் கொள்ளும் பரணி.. சட்டையை பிடித்த முத்துப்பாண்டி!

Karthikeyan S HT Tamil
Published Apr 24, 2025 10:56 AM IST

அண்ணா சீரியல் ஏப்ரல் 24 எபிசோட்: அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா டல்லாக வேலைக்கு கிளம்புவதை பார்த்து சண்முகம் சந்தேகமடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அண்ணா சீரியல் ஏப்ரல் 24 எபிசோட்: சண்முகம் மீது சந்தேகம் கொள்ளும் பரணி.. சட்டையை பிடித்த முத்துப்பாண்டி!
அண்ணா சீரியல் ஏப்ரல் 24 எபிசோட்: சண்முகம் மீது சந்தேகம் கொள்ளும் பரணி.. சட்டையை பிடித்த முத்துப்பாண்டி!

அதாவது, பரணி என்னை டிராப் பண்ணு வெளியே போகணும் என்று சொல்லி ரெடியாக செல்கிறாள். பரணிக்காக காத்திருந்த சண்முகம் வேண்டா வெறுப்பாக ரெடியாகி வந்த வீராவை டிராப் செய்ய கிளம்புகிறான்.

அடுத்து பரணி வீட்டில் விசாவை தேட எங்கும் காணாததால் சண்முகம் தான் எடுத்திருப்பான் என்று சந்தேகம் கொள்கிறாள். அவனுக்கு போன் செய்ய வீராவிடம் பேசி கொண்டே செல்லும் சண்முகம் போனை எடுக்காத காரணத்தால் முத்துபாண்டியும் அப்போ அவன் தான் எடுத்து இருப்பான் என்று நம்புகிறான். மற்றவர்களும் சண்முகம் மீது சந்தேகம் கொள்கின்றனர்.

வீராவை இறக்கி விட்ட பிறகு அவனுக்கு மீண்டும் போன் வர போனை எடுத்ததும் எங்கடா போன என்று கேட்கிறாள். வீராவை டிராப் செய்ய வந்ததாக சொல்ல உடனே வீட்டிற்கு வா என்று சொல்கிறாள். சண்முகம் வீட்டிற்கு போக பரணி ஏண்டா இப்படி பண்ண என்று கேட்க ஒன்றும் புரியாமல் குழப்பம் அடைகிறான்.

ஒரு கட்டத்தில் பரணி ஏண்டா விசாவை எடுத்த என்று கேட்க சண்முகம் எனக்கு தெரியாது என்று சொல்கிறான், முத்துப்பாண்டி கோபப்பட்டு சண்முகம் சட்டையை பிடிக்கிறான். இந்த சமயத்தில் கனி நிறுத்துங்க அண்ணியோட விசாவை நான் தான் எடுத்தேன் என்று கொண்டு வந்து கொடுக்கிறாள்.

இதனால் பரணி மற்றும் முத்துப்பாண்டி சண்முகம் மீது சந்தேகப்பட்டுடோமே என வருத்தம் அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

முந்தைய எபிசோடில், இசக்கியை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாய் அல்லது குழந்தை இரண்டில் ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும் என அதிர்ச்சி கொடுத்திருந்தனர். இதையடுத்து இசக்கியையும் குழந்தையையும் காப்பாற்றுகின்றனர். இன்னொரு பக்கம் போலீசில் வேலைக்கு வந்த வீரா ரொம்ப நேரமாக வெளியே காத்துக் கொண்டிருக்கிற சூழலில், இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.