அண்ணா சீரியல் மார்ச் 26 எபிசோட்: சண்முகம், பரணிக்கு காத்திருந்த ஏமாற்றம்.. கல்யாணத்துக்கு தயாராகும் அறிவழகன்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் மார்ச் 26 எபிசோட்: சண்முகம், பரணிக்கு காத்திருந்த ஏமாற்றம்.. கல்யாணத்துக்கு தயாராகும் அறிவழகன்?

அண்ணா சீரியல் மார்ச் 26 எபிசோட்: சண்முகம், பரணிக்கு காத்திருந்த ஏமாற்றம்.. கல்யாணத்துக்கு தயாராகும் அறிவழகன்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Mar 26, 2025 03:12 PM IST

அண்ணா சீரியல் மார்ச் 26 எபிசோட்: அறிவழகன் தனக்கு பார்த்திருக்கும் பெண்ணை பிடித்திருப்பதாக சொல்ல சண்முகம், பரணி ஏமாற்றம் அடைகிறார்கள். வெங்கடேஷ் போன் காலால் பிரச்னை ஏற்பட அடுத்த நடக்கும் திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.

அண்ணா சீரியல் மார்ச் 26 எபிசோட்: சண்முகம், பரணிக்கு காத்திருந்த ஏமாற்றம்.. கல்யாணத்துக்கு தயாராகும் அறிவழகன்?
அண்ணா சீரியல் மார்ச் 26 எபிசோட்: சண்முகம், பரணிக்கு காத்திருந்த ஏமாற்றம்.. கல்யாணத்துக்கு தயாராகும் அறிவழகன்?

ரத்னாவை பெண் பார்க்க வரும் அறிவழகன் குடும்பத்தினர்

அதாவது ரத்னா தனக்கு கல்யாணம் பேச தான் அழைத்து செல்கிறார்கள் என தெரியாமல் வருகிறாள். இங்கே அறிவழகன் குடும்பத்தினர் அவனுக்கு பெண் பார்ப்பதற்காக கிளம்பி இருக்க, அது தெரிந்து அதிர்ச்சி அடைகின்றான்.

ஆனாலும் வேறு வழியில்லாமல் அவர்களுடன் செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. பெண் பார்க்க போன இடத்தில அறிவழகன் பக்கத்தில் ரத்னா உட்காருகிறாள். அந்த பெண்ணும் அறிவழகனை பிடித்திருப்பதாக சொல்கிறாள். இதனால் சண்முகம் மற்றும் பரணி ஏமாற்றம் அடைகின்றனர்.

அறிவழகனுகும், ரத்னாவுக்கும் தொடர்பு

இந்த சமயத்தில் கல்யாண பெண்ணுக்கு ஒரு போன் கால் வருகிறது. வெங்கடேஷ் போன் செய்து அறிவழகனுக்கும் ரத்னாவுக்கும் தொடர்பு இருப்பதாக தப்பாக சொல்கிறான். இப்போ கூட அவன் அந்த பொண்ணோட தான் பொண்ணு பார்க்க வந்திருக்கான். இப்படிப்பட்ட மாப்பிள்ளை உனக்கு வேணுமா என்று பேசி இந்த ஏற்பாட்டை தடுத்து நிறுத்துகிறான்.

ரத்னா என்னால் தான் அறிவழகனுக்கு திருமணம் கை கூடவில்லை என வருத்தப்படுகிறாள். அதே போல் அறிவழகன் ஏற்கனவே எனக்கு ஒரு வாழ்க்கை அமைந்தா தான், ரத்னா வாழ்க்கை நல்லபடியா இருக்கும் என பேசியதை வைத்து பரணி மற்றும் சண்முகம் இருவரும் சேர்ந்து அறிவழகன் ரத்னாவுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என முடிவுக்கு வருகின்றனர்.

அதற்கு முன் வெங்கடேஷிடம் இருந்து விவாகரத்து வாங்க ஏற்பாடு செய்ய திட்டமிடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அண்ணா கடந்த எபிசோட்

வெங்கடேசன் ஜெயில இருந்து வெளியில் வர, அவருடைய அட்வகேட், உங்களை கஷ்டப்பட்டு தான் பெயிலில் எடுத்து இருக்கேன். அதனால இனிமே நீங்க உங்க பொண்டாட்டி கூட எந்த விதமான பிரச்சினையும் பண்ண கூடாது, மறுபடியும் ஏதாவது பிரச்சனை வந்ததுன்னா, நீங்க திரும்ப உள்ள போயிடுவீங்க. இதனால நீங்க இந்த ஊர்ல இருக்கிறதே நல்லதில்ல வெங்கடேசன். உங்களுடைய சொந்த ஊருக்கே போயிடுங்க என்று வழக்கறிஞர் அட்வைஸ் கொடுக்கிறார்.

பள்ளி வளாகத்தில் கூட்டம் கூடி விடுகிறது. ஆசிரியர்கள் பலர், வெங்கடேஷ் அடிக்காதீங்க, பசங்க எல்லாரும் பாக்குறாங்க,அமைதியாக இருக்க என்று தடுத்தும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் வெங்கடேஷ் சண்டை போடுகிறான். அப்போது, ஆட்டோவில் இருந்து ரத்னா இறங்கி, வெங்கடேசன் ஏன் இப்படி பண்றீங்க என்று சொல்ல, என்னடி இவனோட சேர்ந்து நீ வாழலாம்னு பாக்குறியா உன்னை நான் சும்மாவே விடமாட்டேன். யாரு கூடயும் உன்னை நான் சேர்ந்து வாழவே விடமாட்டேன். நீ என் பொண்டாட்டி, நான் உனக்கு தாலி கட்டி இருக்கிறேன் என்று ரத்னாவின் கையை பிடித்து இழுத்து தவறாக நடிக்க, அங்கிருந்தவர்கள் அவனை தடுத்து அனுப்புகின்றனர்.

மறுபக்கம், அடிவாங்கி இருக்கும் அறிவழகன் வீட்டுக்கு வரும் கனி, அவன் ரத்னா சிறுவயதில் இருந்து பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் சேகரித்து வைத்திருப்பதை பார்க்கிறாள். அக்காவை அறிவழகனுக்கு பிடிச்சி இருக்கு, இந்த விஷயத்தை அண்ணாவிடம் சொல்லி, இரண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சிடலாம் என்று நினைக்கிறாள்.

அண்ணா சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த அண்ணா சீரியல் அதிகப்படியான பார்வையாளர்களை கொண்ட சீரியலாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 500க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்துள்ளது. அண்ணன் - தங்கை பாசத்தை மையப்புள்ளியாக வைத்து இந்த சீரியலின் கதையம்சம் அமைந்துள்ளது. இதில் மிர்ச்சி செந்தில் குமார் அண்ணாவாக தோன்றுகிறார்.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், இளங்கலை காட்சிவழி தொடர்பியல், முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்றவர். 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் என 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவத்துடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் அனைத்து பிரிவுகளிலும் கட்டுரை எழுதுபவர். விளையாட்டு, கிரிக்கெட், சினிமா, லைப்ஸ்டைல் பிரிவுகளில் தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார். விளையாட்டு, சினிமா, பயணம், சமைத்தல் பிடித்தமான பொழுபோக்கு
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.