அண்ணா சீரியல் ஜூன் 4 எபிசோட்: சௌந்தர பாண்டியை கொல்ல துணிந்த சண்முகம்.. வைஜெயந்தி போடும் புது கணக்கு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் ஜூன் 4 எபிசோட்: சௌந்தர பாண்டியை கொல்ல துணிந்த சண்முகம்.. வைஜெயந்தி போடும் புது கணக்கு

அண்ணா சீரியல் ஜூன் 4 எபிசோட்: சௌந்தர பாண்டியை கொல்ல துணிந்த சண்முகம்.. வைஜெயந்தி போடும் புது கணக்கு

Aarthi Balaji HT Tamil
Published Jun 04, 2025 02:28 PM IST

வைஜெயந்தி இவை அனைத்தையும் தூரத்திலிருந்து பார்த்து சண்முகத்துக்கு சௌந்தரபாண்டி மேல தான் சந்தேகம் வந்திருக்கு என நிம்மதி அடைகிறாள். தன்னுடைய ஆட்களிடம் சௌந்தரபாண்டியை சந்திக்க ஏற்பாடு செய்ய சொல்கிறாள்.

அண்ணா சீரியல் ஜூன் 4 எபிசோட்: சௌந்தர பாண்டியை கொல்ல துணிந்த சண்முகம்.. வைஜெயந்தி போடும் புது கணக்கு
அண்ணா சீரியல் ஜூன் 4 எபிசோட்: சௌந்தர பாண்டியை கொல்ல துணிந்த சண்முகம்.. வைஜெயந்தி போடும் புது கணக்கு

அதாவது, வெட்டுக்கிளி சண்முகத்துடன் எல்லாத்தையும் செய்தது சௌந்தரபாண்டி தான் என்று சொல்ல சண்முகம் கையில் வைத்திருந்த தூக்கு கயிறுடன் சௌந்தரபாண்டியை சந்தித்து கொல்ல முயற்சிக்க பரணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் போராடி அவரை காப்பாற்றுகின்றனர்.

வைஜெயந்தி இவை அனைத்தையும் தூரத்திலிருந்து பார்த்து சண்முகத்துக்கு சௌந்தரபாண்டி மேல தான் சந்தேகம் வந்திருக்கு என நிம்மதி அடைகிறாள். தன்னுடைய ஆட்களிடம் சௌந்தரபாண்டியை சந்திக்க ஏற்பாடு செய்ய சொல்கிறாள்.

பிறகு சௌந்தரபாண்டி வீட்டுக்கு வர பாக்கியம் மற்றும் இசக்கி என இருவரும் அவரை கொல்ல காத்துக்கொண்டிருக்க சௌந்தரபாண்டி மேலும் அதிர்ச்சி அடைகிறார்.

இதை அடுத்து பரணி மற்றும் முத்துப்பாண்டி மிகவும் கஷ்டப்பட்டு இவர்களிடம் இருந்து சௌந்தரபாண்டியை காப்பாற்றுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.