அண்ணா சீரியல் ஜூன் 9 எபிசோட்: கடத்தியவனை வரைந்து காட்டும் கனி.. சண்முகத்தின் சத்தியத்தால் ஷாக்காகும் பரணி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் ஜூன் 9 எபிசோட்: கடத்தியவனை வரைந்து காட்டும் கனி.. சண்முகத்தின் சத்தியத்தால் ஷாக்காகும் பரணி

அண்ணா சீரியல் ஜூன் 9 எபிசோட்: கடத்தியவனை வரைந்து காட்டும் கனி.. சண்முகத்தின் சத்தியத்தால் ஷாக்காகும் பரணி

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 09, 2025 05:35 PM IST

அண்ணா சீரியல் ஜூன் 9 எபிசோட்: சண்முகம் கனியை கடத்திச் செல்லும் வண்டியை மடக்கி பிடிக்க, ரவுடிகள் கனியை இறக்கி விட்டு எஸ்கேப்பாகி விடுகின்றனர்.

அண்ணா சீரியல் ஜூன் 9 எபிசோட்: கடத்தியவனை வரைந்து காட்டும் கனி.. சண்முகத்தின் சத்தியத்தால் ஷாக்காகும் பரணி
அண்ணா சீரியல் ஜூன் 9 எபிசோட்: கடத்தியவனை வரைந்து காட்டும் கனி.. சண்முகத்தின் சத்தியத்தால் ஷாக்காகும் பரணி

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் வைஜயந்தியின் ஆட்கள் கனியை கடத்தி சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

வண்டியை மடக்கிய சண்முகம்

அதாவது, சண்முகம் கனியை கடத்திச் செல்லும் வண்டியை மடக்கி பிடிக்க, ரவுடிகள் கனியை இறக்கி விட்டு எஸ்கேப்பாகி விடுகின்றனர். பிறகு கனியிடம் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.. உன்னை கடத்தினவங்களில் ஒருத்தனையாவது நியாபகம் இருக்கா? அதை அப்படியே வரைந்து கொடு, மத்ததை நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறான்.

இதனை தொடர்ந்து சண்முகம் கனியுடன் கோயிலுக்கு வர, பரணி இனிமே நீ கோபமே படக்கூடாது என்று சொல்லி மாலையை போட்டு விட, சண்முகம் என் குடும்பத்து மேல யார் கைய வச்சாலும் சம்மாரம் பண்ணாமல் விட மாட்டேன் என்று சொல்லி கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்கிறான். இதனால் பரணி ஷாக் ஆகிறாள்.

உதவி கேட்கிறான்

பிறகு கனி இரவு தனியாக உட்கார்ந்து தன்னை கடத்தியவனை வரைந்து கொடுக்க, சண்முகம் அந்த போட்டோவுடன் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவனை சந்தித்து உதவி கேட்கிறான். அவர் பட்டப்பகலில் ஒருத்தன் கடத்தி இருக்கான் என்றால் அவன் கண்டிப்பா ஏற்கனவே கேஸ்ல மாட்டி இருப்பான். FIR பைல்களை செக் பண்ணா கண்டு பிடித்து விடலாம் என்று சொல்கிறான்.

அடுத்து சண்முகம் முத்துபாண்டியை சந்தித்து விஷயத்தை சொல்ல, அவன் என்னுடைய ஸ்டேஷன்ல இருக்க பைல்களை பார்க்கிறது பிரச்சினை இல்ல.. ஆனா, இந்த மாவட்டம் முழுக்க பார்க்கணும், அதுக்கு அதிகாரி வைஜெயந்தி மேடம் தான் மனசு வைக்கணும் என்று சொல்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? சண்முகம் கனியை கடத்தியவனை எப்படி கண்டுபுடிக்க போகிறான் என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.