அண்ணா சீரியல் மே 8 எபிசோட்: கடத்தப்படும் கனி.. காப்பாற்ற உதவும் கௌதம்.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் மே 8 எபிசோட்: வெங்கடேஷ் கனியை கடத்திச் சென்ற சமயத்தில் சண்முகத்தோடு சேர்ந்து கௌதமும் கனியை காப்பாற்ற முயற்சி செய்கிறான்.

அண்ணா சீரியல் மே 8 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சூட்கேஸை வாங்கி வந்து பரணிக்கு அமெரிக்கா போக வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தி விட்டு சென்ற நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கனியை கடத்திய வெங்கடேஷ்
அதாவது, ரத்னா அறிவழகனிடம் பேசி கொண்டிருக்க இதை பார்க்கும் வெங்கடேஷ் இவனுக்காக தானே என்னை வேண்டாம்னு தூக்கி போட்ட என்று கடுப்பாகிறான். அறிவழகன் கிளம்பியதும் வெங்கடேஷ் ரத்னாவிடம் பிரச்சனை செய்து அவளது புடவையை தொடப் போக பக்கத்தில் இருந்த கனி வெங்கடேஷ் கையை பிடித்து கடித்து விடுகிறாள், வெங்கடேஷ் கனியை அங்கிருந்து கடத்தி செல்கிறான்.
கோபமான சண்முகம்
இதையடுத்து ரத்னா வீட்டிற்கு ஓடி வருகிறாள், ஷண்முகம் இல்லாத நிலையில் போன் போட்டு அண்ணனுக்கும் முத்துபாண்டிக்கும் விஷயத்தை சொல்ல இருவரும் பயங்கர கோபத்தில் கிளம்பி செல்கின்றனர். அப்போது கௌதம் ஒரு பெண்ணை கடத்தி செல்வதை பார்த்து வெங்கடேஷிடம் சண்டையிட வெங்கடேஷ் கௌதமை அடித்து துவைத்து எடுக்கிறான்.
கனியை காப்பாற்ற முயலும் கௌதம்
அங்கு வந்த சண்முகம், முத்துப்பாண்டி ஆகியோர் வெங்கடேஷை அடித்து ஓட விடுகின்றனர். வீரா மற்றும் சண்முகத்திற்கு கனியை காப்பாற்ற முயற்சி செய்த கௌதம் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படுகிறது. அடுத்து கௌதம் வீட்டிற்கு வர அங்கு வெங்கடேஷ் காத்திருக்கிறான்.
வைஜெயந்தி திட்டம்
இவை அனைத்தும் வைஜெயந்தியின் திட்டம் தான் என்பது தெரிய வருகிறது. வெங்கடேஷ் அறிவழகன் வெளியே வராதபடி அவனை பிடித்து உள்ளே போடணும் என்று உதவி கேட்கிறான். கௌதம் வீராவை காதலித்து திருமணம் செய்யணும் என்று வைஜெயந்தி சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

டாபிக்ஸ்