அண்ணா சீரியல் மே 6 எபிசோட்: சூனியத்தை நம்பும் பரணி.. அக்கறை காட்டும் சண்முகம்.. அண்ணா சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் மே 6 எபிசோட்: சூனியத்தை நம்பும் பரணி.. அக்கறை காட்டும் சண்முகம்.. அண்ணா சீரியல்

அண்ணா சீரியல் மே 6 எபிசோட்: சூனியத்தை நம்பும் பரணி.. அக்கறை காட்டும் சண்முகம்.. அண்ணா சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published May 06, 2025 12:50 PM IST

அண்ணா சீரியல் மே 6 எபிசோட்: பரணியின் கையை 3 நாட்களுக்குள் சரியாக சண்முகம் அக்கறையாக கவனித்து வருகிறான்.

அண்ணா சீரியல் மே 6 எபிசோட்: சூனியத்தை நம்பும் பரணி.. அக்கறை காட்டும் சண்முகம்.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் மே 6 எபிசோட்: சூனியத்தை நம்பும் பரணி.. அக்கறை காட்டும் சண்முகம்.. அண்ணா சீரியல்

பதிலடி தந்த வீரா

அதாவது வீரா வைஜெயந்தி சொன்ன வேலைகளை செய்ய முடியாது என பதிலடி கொடுக்க வைஜெயந்தி உன்ன வேலை விட்டு தூக்கிடுவேன் என்று இந்த மிரட்டுகிறாள். வீரா அப்படி நீங்க பண்ணீங்கன்னா என்கிட்ட தோத்துப்போனதா தான் அர்த்தம் என்று பதிலடி கொடுத்து அங்கிருந்து கிளம்புகிறாள். பிறகு கௌதம் வீட்டுக்கு வந்ததும் பாட்டி நடந்த விஷயத்தை சொல்ல அவளை ஏமாத்தி காதலிச்சு கல்யாணம் பண்ணி நிரந்தரமா இந்த வீட்டோட வேலைக்காரியாக மாற்றுவேன் என சபதம் எடுக்கிறான்.

பரணியின் கோபம்

இன்னொரு என் பொண்ணுக்கு கை உடைந்து அவ அமெரிக்கா போகக்கூடாது என்பதற்காக தான் இந்த யாகத்தை செஞ்சிருக்க என்று சண்முகத்திடம் சௌந்திரபாண்டி கேட்டதை பரணி நம்பியதால், சண்முகத்திடம் அமெரிக்கா போகக்கூடாது நீ தான் இப்படி பூஜை செஞ்சிருக்க என்று கோபப்படுகிறாள். டாக்டர் கை சரியாக கொஞ்ச நாள் ஆகும் என்று சொல்ல பரணியின் கோபம் இன்னும் அதிகமாகிறது.

சவால் விடும் சண்முகம்

உடனே சண்முகம் உனக்கு கை சரி ஆகணும் அவ்வளவுதான் நான் மூன்றே நாள்ல சரி செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டு பரணியை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். வயதான நாட்டு வைத்திய பாட்டியை வீட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சை கொடுக்க கையை அசைக்காமல் இருந்தால் மூணே நாளில் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

அக்கறை காட்டும் சண்முகம்

சண்முகம் பரணியை அக்கரையாக கவனித்துக் கொள்ள தொடங்குகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.