அண்ணா சீரியல் மே 6 எபிசோட்: சூனியத்தை நம்பும் பரணி.. அக்கறை காட்டும் சண்முகம்.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் மே 6 எபிசோட்: பரணியின் கையை 3 நாட்களுக்குள் சரியாக சண்முகம் அக்கறையாக கவனித்து வருகிறான்.

அண்ணா சீரியல் மே 6 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வைஜெயந்தி வீராவை வீட்டுக்கு வரவைத்து வீட்டு வேலை செய்ய சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பதிலடி தந்த வீரா
அதாவது வீரா வைஜெயந்தி சொன்ன வேலைகளை செய்ய முடியாது என பதிலடி கொடுக்க வைஜெயந்தி உன்ன வேலை விட்டு தூக்கிடுவேன் என்று இந்த மிரட்டுகிறாள். வீரா அப்படி நீங்க பண்ணீங்கன்னா என்கிட்ட தோத்துப்போனதா தான் அர்த்தம் என்று பதிலடி கொடுத்து அங்கிருந்து கிளம்புகிறாள். பிறகு கௌதம் வீட்டுக்கு வந்ததும் பாட்டி நடந்த விஷயத்தை சொல்ல அவளை ஏமாத்தி காதலிச்சு கல்யாணம் பண்ணி நிரந்தரமா இந்த வீட்டோட வேலைக்காரியாக மாற்றுவேன் என சபதம் எடுக்கிறான்.