அண்ணா சீரியல் ஜூன் 6 எபிசோட்: கடத்தப்படும் கனி.. தங்கையை காப்பாற்ற சீறி பாயும் சண்முகம்.. அண்ணா சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் ஜூன் 6 எபிசோட்: கடத்தப்படும் கனி.. தங்கையை காப்பாற்ற சீறி பாயும் சண்முகம்.. அண்ணா சீரியல்

அண்ணா சீரியல் ஜூன் 6 எபிசோட்: கடத்தப்படும் கனி.. தங்கையை காப்பாற்ற சீறி பாயும் சண்முகம்.. அண்ணா சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Jun 06, 2025 04:37 PM IST

அண்ணா சீரியல் ஜூன் 6 எபிசோட்: வைஜெயந்தியின் ஆட்கள் கனியை கடத்திய நிலையில், அவளைக் காப்பாற்ற சண்முகம் விரைந்து புறப்படுகிறான்.

அண்ணா சீரியல் ஜூன் 6 எபிசோட்: கடத்தப்படும் கனி.. தங்கையை காப்பாற்ற சீறி பாயும் சண்முகம்.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் ஜூன் 6 எபிசோட்: கடத்தப்படும் கனி.. தங்கையை காப்பாற்ற சீறி பாயும் சண்முகம்.. அண்ணா சீரியல்

கோவிலுக்கு கிளம்பும் ரத்னா

அதாவது ரத்னா கோவிலுக்கு கிளம்புகிறாள். அறிவழகன் இந்த விஷயம் அறிந்து நானும் உன் கூட வருகிறேன் என்று கிளம்புகிறான். இதைப் பார்த்த மாலதி டீச்சர் உங்களுக்கு முன்னாடி நான் கோவிலுக்கு போறேன் என்று கிளம்பி செல்கிறாள்.

அறிவழகனால் கடுப்பாகும் ரத்னா

அதன் பிறகு இருவரும் கோவிலுக்கு வர ஏற்கனவே மாலதி டீச்சர் இங்கு இருக்க அறிவழகன் இங்கு என்ன பண்றீங்க என்று கேட்க 108 விளக்கு போட்டா நல்லபடியா கல்யாணம் ஆகணும்னு சொன்னாங்க. அதனால விளக்கு போட வந்தேன் என்று சொல்கிறாள். மேலும் அறிவழகனிடம் உதவி கேட்க அறிவழகன் அவளுக்கு உதவி செய்ய இதை பார்த்த ரத்னா கடுப்பாகிறாள்.

கடத்தப்பட்ட கனி

இன்னொரு பக்கம் வைஜெயந்தியின் ஆட்கள் கனியை கடத்த உடன்குடி இதை பார்த்து சண்முகத்துக்கு தகவல் கொடுக்க சண்முகம் அவர்களை பின்தொடர்ந்து சென்று இருக்கும் இடத்தை சொல்ல சொல்கிறான். பிறகு யாருக்கும் தெரியாமல் சண்முகம் இங்கிருந்து கிளம்பி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சண்முகத்திடம் சிக்கிய சௌந்திர பாண்டி

முன்னதாக, சண்முகம் தூக்கு கயிறுடன் வந்து சௌந்தரபாண்டிக்கு மரண பயத்தை காட்டிய நிலையில் முத்துப்பாண்டி சண்முகத்திடம் இருந்து சௌந்திர பாண்டியை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வர இங்கே பாக்கியம் மற்றும் இசக்கி என இருவரும் சேர்ந்து சௌந்தரபாண்டியை அடி வெளுத்தெடுக்கின்றனர்.

பழிவாங்க கூட்டணி

முத்துப்பாண்டி இவர்களிடம் இருந்தும் சௌந்தரபாண்டியை காப்பாற்றி இனிமே ஏதாவது செஞ்சா நானே சும்மா விடமாட்டேன் என வார்னிங் கொடுக்கிறான். அதைத்தொடர்ந்து வைஜெயந்தி சௌந்தரபாண்டியை சந்தித்து அவருடன் சேர்ந்து சண்முகத்தை பழிவாங்க கூட்டணி போடுகிறாள்.

பரணியின் பிளான்

பிறகு பரணி சண்முகம் அதிகமாக கோபப்படுவதால் அவனது கோபத்தை தணிக்க மாலை போடுவதற்காக கோவிலுக்கு வந்திருக்கிறாள். ரத்னாவுக்கும் போன் செய்து கோவிலுக்கு வர சொல்ல ரத்னா ஸ்கூலில் இருந்து கோவிலுக்கு வர கனி தனியாக வீட்டுக்கு கிளம்புகிறாள். சண்முகம் கோவிலுக்கு வர வெளியே வந்த கனியை கடத்த வைஜெயந்தியின் ஆட்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.