அண்ணா சீரியல் ஜூன் 5 எபிசோட்: மாலை போட தயாரான பரணி.. கனியை சுற்றி நடக்கும் சதி.. அண்ணா சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் ஜூன் 5 எபிசோட்: மாலை போட தயாரான பரணி.. கனியை சுற்றி நடக்கும் சதி.. அண்ணா சீரியல்

அண்ணா சீரியல் ஜூன் 5 எபிசோட்: மாலை போட தயாரான பரணி.. கனியை சுற்றி நடக்கும் சதி.. அண்ணா சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Jun 05, 2025 02:59 PM IST

அண்ணா சீரியல் ஜூன் 5 எபிசோட்: வீட்டில் உள்ள எல்லோரும் கோயிலுக்கு சென்ற நிலையில், கனியை கடத்த சதித்திட்டம் நடந்து வருகிறது.

அண்ணா சீரியல் ஜூன் 5 எபிசோட்: மாலை போட தயாரான பரணி.. கனியை சுற்றி நடக்கும் சதி.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் ஜூன் 5 எபிசோட்: மாலை போட தயாரான பரணி.. கனியை சுற்றி நடக்கும் சதி.. அண்ணா சீரியல்

புரட்டி எடுக்கப்பட்ட சௌந்திரபாண்டி

அதாவது, முத்துப்பாண்டி சண்முகத்திடம் இருந்து சுதந்திர பாண்டியை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வர இங்கே பாக்கியம் மற்றும் இசக்கி என இருவரும் சேர்ந்து சௌந்தரபாண்டியை அடி வெளுத்தெடுக்கின்றனர்.

முத்துப்பாண்டி இவர்களிடம் இருந்தும் சௌந்தரபாண்டியை காப்பாற்றி இனிமே ஏதாவது செஞ்சா நானே சும்மா விடமாட்டேன் என வார்னிங் கொடுக்கிறான். அதைத்தொடர்ந்து வைஜெயந்தி சௌந்தரபாண்டியை சந்தித்து அவருடன் சேர்ந்து சண்முகத்தை பழிவாங்க கூட்டணி போடுகிறாள்.

மாலை போட தயாராகும் பரணி

பிறகு பரணி சண்முகம் அதிகமாக கோபப்படுவதால் அவனது கோபத்தை தணிக்க மாலை போடுவதற்காக கோவிலுக்கு வந்திருக்கிறாள். ரத்னாவுக்கும் போன் செய்து கோவிலுக்கு வர சொல்ல ரத்னா ஸ்கூலில் இருந்து கோவிலுக்கு வர கனி தனியாக வீட்டுக்கு கிளம்புகிறாள்.

கனிக்கு வரும் ஆபத்து

சண்முகம் கோவிலுக்கு வர வெளியே வந்த கனியை கடத்த வைஜெயந்தியின் ஆட்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சிக்கிய சௌந்தரபாண்டி

முன்னதாக, வெட்டுக்கிளி சண்முகத்துடன் எல்லாத்தையும் செய்தது சௌந்தரபாண்டி தான் என்று சொல்ல சண்முகம் கையில் வைத்திருந்த தூக்கு கயிறுடன் சௌந்தரபாண்டியை சந்தித்து கொல்ல முயற்சிக்க பரணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் போராடி அவரை காப்பாற்றுகின்றனர்.

வைஜெயந்தி திட்டம்

வைஜெயந்தி இவை அனைத்தையும் தூரத்திலிருந்து பார்த்து சண்முகத்துக்கு சௌந்தரபாண்டி மேல தான் சந்தேகம் வந்திருக்கு என நிம்மதி அடைகிறாள். தன்னுடைய ஆட்களிடம் சௌந்தரபாண்டியை சந்திக்க ஏற்பாடு செய்ய சொல்கிறாள்.