அண்ணா சீரியல் ஏப்ரல் 22 எபிசோட்: இரட்டை உயிரையும் காப்பாற்றிய பரணி..வீராவுக்கு விளையாட்டு காட்டும் வைஜெயந்தி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் ஏப்ரல் 22 எபிசோட்: இரட்டை உயிரையும் காப்பாற்றிய பரணி..வீராவுக்கு விளையாட்டு காட்டும் வைஜெயந்தி

அண்ணா சீரியல் ஏப்ரல் 22 எபிசோட்: இரட்டை உயிரையும் காப்பாற்றிய பரணி..வீராவுக்கு விளையாட்டு காட்டும் வைஜெயந்தி

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 22, 2025 02:30 PM IST

அண்ணா சீரியல் ஏப்ரல் 22 எபிசோட்: இசக்கியை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாய் அல்லது குழந்தை இரண்டில் ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும் என அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

அண்ணா சீரியல் ஏப்ரல் 22 எபிசோட்: இரட்டை உயிரையும் காப்பாற்றிய பரணி..வீராவுக்கு விளையாட்டு காட்டும் வைஜெயந்தி
அண்ணா சீரியல் ஏப்ரல் 22 எபிசோட்: இரட்டை உயிரையும் காப்பாற்றிய பரணி..வீராவுக்கு விளையாட்டு காட்டும் வைஜெயந்தி

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி வழுக்கி விழுந்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, இசக்கியை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாய் அல்லது குழந்தை இரண்டில் ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும் என அதிர்ச்சி கொடுக்கின்றனர். யாரை காப்பாற்ற வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல, எல்லாரும் மேலும் அதிர்ச்சி அடைகின்றனர்.

குழந்தையை காப்பாற்ற வழி

மொத்த பேரும் ஹாஸ்பிடலில் கூடி விட, பரணி உள்ளே சென்று மீண்டும் இசக்கியை பரிசோதனை செய்கிறாள். இரண்டு பேரையும் காப்பாற்ற ஒரு வழி இருப்பதை கண்டுபிடிக்கிறாள்.

இதையடுத்து இசக்கியையும் குழந்தையையும் காப்பாறுகின்றனர். இன்னொரு பக்கம் போலீசில் வேலைக்கு வந்த வீரா ரொம்ப நேரமாக வெளியே காத்துக் கொண்டிருக்கிறாள்.

அடுத்து ஸ்டேஷனுக்கு வந்த வைஜெயந்தி இந்த பொண்ணை எதுக்கு வெளியே காக்க வச்சிட்டு இருக்கீங்க என்று விசாரிக்க, இன்ஸ்பெக்டர் அந்த பொண்ணு வேலையில் சேர வந்திருப்பதாக சொல்கிறார்.

திடீரென்று உதவிய வைஜெயந்தி

வைஜெயந்தி எனக்கு தெரிந்த பொண்ணு தான்.. நல்ல பொண்ணு என்று வேலையில் சேர சொல்லி விட்டு வாழ்த்து சொல்ல வீரா வைஜெயந்தி தனக்கு உதவியதாக தவறாக புரிந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். அண்ணா பல்கலைகழகத்தில் பி இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்கும் இவர், மூன் டிவி, புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களை தொடர்ந்து கடந்த 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.