அண்ணா சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: பலிக்க தொடங்கிய பாக்கியத்தின் கனவு.. இசக்கிக்கு ஆபத்து!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: பலிக்க தொடங்கிய பாக்கியத்தின் கனவு.. இசக்கிக்கு ஆபத்து!

அண்ணா சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: பலிக்க தொடங்கிய பாக்கியத்தின் கனவு.. இசக்கிக்கு ஆபத்து!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 21, 2025 04:09 PM IST

அண்ணா சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: பாக்கியம் இசக்கி கீழே விழுந்து அடிபடுவது போல கனவு கண்டு அல்லது எழுந்த நிலையில் அதே சிந்தனையில் இருக்கிறாள்.அதன் பிறகு தூங்கி எழுந்த சௌந்தரபாண்டி காபி போட்டு கொடுக்க சொல்ல, பாக்கியம் காஃபி எல்லாம் ஒன்னும் கிடையாது;

அண்ணா சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: பலிக்க தொடங்கிய பாக்கியத்தின் கனவு.. இசக்கிக்கு ஆபத்து! -
அண்ணா சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: பலிக்க தொடங்கிய பாக்கியத்தின் கனவு.. இசக்கிக்கு ஆபத்து! -

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமையை எபிசோடில் போலீஸ் வேலைக்கு சேர போன வீராவை, வைஜெயந்தி சதி செய்து காக்க வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஏற்றிவிட்ட செளந்தரபாண்டி

அதாவது, பாக்கியம் இசக்கி கீழே விழுந்து அடிபடுவது போல கனவு கண்டு அல்லது எழுந்த நிலையில் அதே சிந்தனையில் இருக்கிறாள்.அதன் பிறகு தூங்கி எழுந்த சௌந்தரபாண்டி காபி போட்டு கொடுக்க சொல்ல, பாக்கியம் காஃபி எல்லாம் ஒன்னும் கிடையாது; நான் போய் இசக்கியை பாத்துட்டு வந்துடுறேன் என்று கிளம்ப, சௌந்தர பாண்டி அவ அந்த வீட்டில் இருந்தா எப்படி நல்லா இருப்பா என ஏற்றி விடுகிறார்.

பாக்கியத்தின் மூலமாக இசக்கி இந்த வீட்டுக்கு வரவைத்து விட வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். பிறகு பாக்கியம் மற்றும் சிவபாலன் என இருவரும் கிளம்பி சண்முகம் வீட்டிற்கு வருகின்றனர். இங்கே இசக்கி, சேர் மீது ஏறி துணி காய போட போன நிலையில் கீழே விழுந்து அடிபடுகிறது.

இந்த சமயத்தில் வந்த பாக்கியம் மற்றும் சிவபாலன் இருவரும் இசக்கியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றனர். தாய் அல்லது குழந்தை இரண்டில் ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும் என்று டாக்டர் சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். அண்ணா பல்கலைகழகத்தில் பி இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்கும் இவர், மூன் டிவி, புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களை தொடர்ந்து கடந்த 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.