அண்ணா சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்: பரணியின் பாஸ்போட்டை மறைத்து வைத்த கனி.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்: பரணி வெளிநாடு போவதை தடுக்க கனி யாருக்கும் தெரியாமல் விசா மற்றும் பாஸ்போர்ட்டை எடுத்து மறைத்து விடுகிறாள்.

அண்ணா சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணிக்கு விசா வந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பாஸ்போர்டை மறைத்து வைக்கும் கனி
அதாவது பரணி வெளிநாடு செல்வது நினைத்து எல்லாரும் சந்தோசமாகவும் அதே சமயத்தில் பரணியை பிரிவதை நினைத்து வருத்தத்துடன் இருக்கின்றனர். பரணி வெளிநாடு போவதை தடுக்க கனி யாருக்கும் தெரியாமல் விசா மற்றும் பாஸ்போர்ட்டை எடுத்து மறைத்து விடுகிறாள்.
பரணிக்கு வலுக்கும் சந்தேகம்
அடுத்து சண்முகம் ரூமுக்கு வர பரணியிடம் நீ வெளிநாடு போய் நல்லபடியா படி எனக்கு சந்தோசம் தான் என்று சொல்ல பரணி அவன் மீது சந்தேகம் அடைகிறாள். இவன் ஏதோ வேலை பார்க்க நினைக்குறான். உஷாரா தான் இருக்கனும் என யோசிக்கிறாள்.
சந்தோஷத்தில் சண்முகம்
அடுத்து வீரா போலீஸ் யூனிபார்மில் ரெடியாகி வர அவளை பார்த்து எல்லாரும் சந்தோஷப்படுகின்றனர். சண்முகம் இன்னொரு தங்கையின் வாழ்க்கையிலும் விளக்கேற்றியாச்சு என்று அம்மா முன்னாடி நின்று சந்தோஷப்படுகிறான்.
சமாளிக்கும் வீரா
இதையடுத்து வீரா ஸ்டேஷனுக்கு ஸ்வீட்டுடன் வர இன்ஸ்பெக்டர் வைஜயந்தியின் பேச்சை கேட்டு வீராவை பணியில் சேர விடாமல் வெளியேவே காக்க வைக்கிறார். சண்முகம், பரணி என எல்லாரும் போன் செய்து வேலையில் சேர்ந்தாச்சா என்று விசாரிக்க இன்ஸ்பெக்டர் மீட்டிங் போய் இருப்பதாக சொல்லி சமாளிக்கிறாள்.
பதற்றத்தில் குடும்பம்
முத்துப்பாண்டி போன் செய்து பேச அப்போதும் இதையே சொல்ல அவன் சந்தேகப்பட்டு ஏதாவது பிரச்சனையா என்று கேட்க இல்லை என்று சொல்கிறாள். நைட் ஆனந்தும் வீரா வெளியேவே காத்திருக்க வீட்டில் அவள் வராததால் பதற்றம் அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்