அண்ணா சீரியல் ஏப்ரல் 17 எபிசோட்: பொண்டாட்டியால் மாட்டிய திருடன்! - அந்தர் பல்டி அடித்த வைஜெயந்தி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் ஏப்ரல் 17 எபிசோட்: பொண்டாட்டியால் மாட்டிய திருடன்! - அந்தர் பல்டி அடித்த வைஜெயந்தி

அண்ணா சீரியல் ஏப்ரல் 17 எபிசோட்: பொண்டாட்டியால் மாட்டிய திருடன்! - அந்தர் பல்டி அடித்த வைஜெயந்தி

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 17, 2025 02:05 PM IST

அண்ணா சீரியல் ஏப்ரல் 17 எபிசோட்: போஸ்டரை பார்த்த வைஜெயந்தி இது சண்முகத்தின் திட்டமாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறாள். அதே போல் இன்னொரு பக்கம் போஸ்டரை பார்த்த திருடனின் மனைவி சண்முகத்திற்கு போன் செய்து, உயிரோட இருக்க என் புருஷனுக்கு யாருடா போஸ்டர் ஒட்டியது என சத்தம் போடுகிறாள்.

அண்ணா சீரியல் ஏப்ரல் 17 எபிசோட்: பொண்டாட்டியால் மாட்டிய திருடன்.. அந்தர் பல்டி அடித்த வைஜெயந்தி! - நடந்தது என்ன?
அண்ணா சீரியல் ஏப்ரல் 17 எபிசோட்: பொண்டாட்டியால் மாட்டிய திருடன்.. அந்தர் பல்டி அடித்த வைஜெயந்தி! - நடந்தது என்ன?

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் போஸ்டர் அடித்து ஒட்டி திருடனை கண்டுபிடிக்க திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

பொண்டாட்டியால் மாட்டிய திருடன்

அதாவது, போஸ்டரை பார்த்த வைஜெயந்தி இது சண்முகத்தின் திட்டமாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறாள். அதே போல் இன்னொரு பக்கம் போஸ்டரை பார்த்த திருடனின் மனைவி சண்முகத்திற்கு போன் செய்து, உயிரோட இருக்க என் புருஷனுக்கு யாருடா போஸ்டர் ஒட்டியது என சத்தம் போடுகிறாள்.

அதற்கு யாரோ தப்பா என் நம்பரை கொடுத்து போஸ்டர் நடிச்சிருக்காங்க என்று சொல்லும் சண்முகம் அந்த பெண்ணிடம் நீங்க எந்த ஊரு, எங்க இருக்கீங்க? உங்க புருஷன் எங்க இருக்காரு என்று கேட்டு தெரிந்து கொண்டு கிளம்பி செல்கிறான்.

மறுபக்கம் வைஜெயந்தி அவன் கிடைச்சிட்டா அவ்வளவுதான்.. நம்ப திட்டம் எல்லாம் வேஸ்ட்டா போயிடும் என சண்முகத்தை மடக்க கிளம்பி வருகிறாள்.

அதற்குள் இங்கே வீட்டிற்கு வந்த சண்முகம் அந்த ரவுடியை பிடித்து விடுகிறான், முத்துப்பாண்டி உண்மையை ஒத்துக்கிட்டா உனக்கு தண்டனை குறையும் என சொல்லி மிரட்ட, அவன் நான் தான் நகையை திருடினேன்.. தப்பிக்க வழியில்லாமல் அந்த பொண்ணோட பேக்கில் போட்டுட்டேன் என்று சொல்லி ஆஜர் ஆகி விடுகிறான்.

உடனே இந்த விஷயம் அறிந்த வைஜெயந்தி ஸ்டேஷனுக்கு வந்து, எனக்கு அப்பவே இந்த பொண்ணு இப்படி பண்ண வாய்ப்பு இல்லனு ஒரு சந்தேகம் இருந்தது.. FIR போடலல.. அதுவரைக்கும் நல்லது என்று நல்லவள் வேஷம் போட்டு, பிருந்தாவை விடுவிக்கிறாள்.

இந்த விஷயம் அறிந்து கௌதம் கோபம் அடைகிறான், வீட்டில் பொருட்களை தூக்கி போட்டு உடைக்கிறான். வைஜெயந்தி அடுத்து என்ன பண்ணுவது என யோசிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். அண்ணா பல்கலைகழகத்தில் பி இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்கும் இவர், மூன் டிவி, புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களை தொடர்ந்து கடந்த 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.