அண்ணா சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: போலீஸ் கனவுக்கு ஆப்பு…வைஜெந்தியால் வந்த வினை! - பதற்றத்தில் சண்முகம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: போலீஸ் கனவுக்கு ஆப்பு…வைஜெந்தியால் வந்த வினை! - பதற்றத்தில் சண்முகம்!

அண்ணா சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: போலீஸ் கனவுக்கு ஆப்பு…வைஜெந்தியால் வந்த வினை! - பதற்றத்தில் சண்முகம்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 14, 2025 03:56 PM IST

அண்ணா சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், வீராவும் வைகுண்டமும் பஸ்ஸில் ஏறி செல்ல, வைஜெயந்தி ஏற்பாடு செய்த ரவுடிகளும் பின்தொடர்ந்து சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குருத்து பார்க்கலாம் வாங்க.

அண்ணா சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்:  போலீஸ் கனவுக்கு ஆப்பு…வைஜெந்தியால் வந்த வினை! - பதற்றத்தில் சண்முகம்!
அண்ணா சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: போலீஸ் கனவுக்கு ஆப்பு…வைஜெந்தியால் வந்த வினை! - பதற்றத்தில் சண்முகம்!

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், வீராவும் வைகுண்டமும் பஸ்ஸில் ஏறி செல்ல, வைஜெயந்தி ஏற்பாடு செய்த ரவுடிகளும் பின்தொடர்ந்து சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குருத்து பார்க்கலாம் வாங்க.

பேரதிர்ச்சியில் சண்முகம்

அதாவது, ரவுடிகள் வீராவை திசைத் திருப்பி நகையை அவளது பைக்குள் போட்டு விடுகின்றனர். இது பிரச்சினையாக, வைஜெயந்தி வீராவின் பையில் இருந்து நகையை எடுக்கிறாள். வீராவும் வைகுண்டமும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதனையடுத்து, ஓ நீ திருடியா என வீராவை கைது செய்யும் வைஜெயந்தி அவளை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து உட்கார வைக்கிறாள். இந்த விஷயம் அறிந்த முப்பிடாதி சண்முகத்துக்கு போன் செய்து தகவல் சொல்ல சண்முகம் பேரதிர்ச்சி அடைகிறான்.

உடனே ஸ்டேஷனுக்கு கிளம்பி வரும் அவன், இதெல்லாம் வைஜெயந்தி திட்டமாக கூட இருக்கலாம் என சந்தேகப்படுகிறான். வீரா மேல கேஸ் எழுதிட்டா அவளுடைய கனவு மொத்தமா இல்லாமல் போய்டும், அதுக்கு முன்னாடி உண்மையை கண்டு பிடிக்கணும் என சொல்கிறான்.

உனக்கு போலீஸ் மூளை.. அங்க கண்டிப்பா ஏதாவது தப்பா நடந்திருக்கும், சந்தேகப்படுற மாதிரி ஏதாவது நடந்துச்சா யோசி யோசி என யோசிக்க சொல்கிறான். வீராவும் சம்பவ இடத்தில நடந்தது என்ன என்று யோசிக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்கும் இவர், 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம், பிசினஸ், விளையாட்டு, அரசியல், தேசம் - உலகம், பொழுது போக்கு உள்ளிட்ட துறைகளில் கட்டுரைகள் எழுதும் திறமை கொண்ட இவர், முன்னதாக புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பொழுது போக்கு செய்திகளை வழங்கி வருகிறார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஆகும். திரைப்படங்கள் பார்ப்பது, நாவல்கள் படிப்பது, சிறுகதைகள் எழுதுவது, சினிமா சார்ந்த உரையாடல்கள் கேட்பது, நீண்ட தூர பைக் பயணங்கள், பழமையான கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வது உள்ளிட்டவை இவரது பொழுது போக்கு ஆகும்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.