அண்ணா சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: மருந்தில் விஷமா? சண்முகத்தால் ஷாக்கான குடும்பம்.. அண்ணா சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: மருந்தில் விஷமா? சண்முகத்தால் ஷாக்கான குடும்பம்.. அண்ணா சீரியல்

அண்ணா சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: மருந்தில் விஷமா? சண்முகத்தால் ஷாக்கான குடும்பம்.. அண்ணா சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Apr 11, 2025 03:01 PM IST

அண்ணா சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: இசக்கிக்கு கொடுத்திருக்கும் மருந்தில் விஷம் கலந்திருக்கும் என சண்முகம் சந்தேகப்பட அதை சௌந்தரபாண்டி தனக்கு சாதகமாக்கி கொள்கிறான்.

அண்ணா சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: மருந்தில் விஷமா? சண்முகத்தால் ஷாக்கான குடும்பம்..  அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: மருந்தில் விஷமா? சண்முகத்தால் ஷாக்கான குடும்பம்.. அண்ணா சீரியல்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கிக்கு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் சண்முகத்திற்கு சௌந்தரபாண்டி மீது சந்தேகம் எழுந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மருந்தில் விஷம்- சந்தேகத்தில் சண்முகம்

அதாவது, இசக்கிக்கு மருந்து கொடுக்க போகும் சமயத்தில் சண்முகம் கொடுக்க வேண்டாம் அதில் விஷம் கலந்து இருக்கு என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர், இந்த சௌந்தரபாண்டி தான் ஏதோ கலந்து இருக்கார் என்று சொல்ல எல்லாரும் குழப்பம் அடைகின்றனர்.

சௌந்தரபாண்டி என் பேரனுக்கு நானே விஷம் கொடுப்பேனா என்று கேட்க சண்முகம் அப்படினா இந்த மருந்தை நீ முதலில் குடி என்று சொல்ல சௌந்தரபாண்டி நான் எதுக்குலே குடிக்கணும் என்று ஒரு ட்ராமா போடுகிறார்.

வலுக்கும் சந்தேகம்.. நடக்கும் ட்ராமா

அதனை தொடர்ந்து பாண்டியம்மாவிடம் நீ குடி அக்கா என்று சொல்ல அவள் எனக்கு வேண்டாம் என்று சொல்கிறாள். அடுத்து சனியனை குடிக்க சொல்ல அவனும் முடியாது என்று மறுக்க சௌந்தரபாண்டி பாக்கியத்தை குடிக்க சொல்கிறார்.

பாக்கியம் இப்போ தான் எனக்கும் உங்க மேல சந்தேகமா இருக்கு என்று சொல்ல சௌந்தரபாண்டி அந்த மருந்தை குடித்து நெஞ்சை பிடித்து உட்காருவது போல் ட்ராமா போட்டு சிரிக்கிறார். பிறகு இசக்கிக்கு மருந்து கொடுக்கின்றனர்.

ரவுடிகள் திட்டத்தில் சிக்கிய வீரா

மறுபக்கம் வைஜெயந்தி திட்டத்தின் படி ரவுடிகள் ஒரு பெண்ணின் நகையை பறித்து அதை வீராவின் பையில் போட்டு விடுகின்றனர். அடுத்து அந்த பெண் நகையை காணவில்லை என சத்தம் போட வீரா வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விட சொல்கிறாள்.

ஸ்டேஷனுக்கு வந்ததும் ஒவ்வொருத்தரையாக பரிசோதனை செய்கிறார் வைஜெயந்தி.. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.