அண்ணா சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: சண்முகத்தை அவமானப்படுத்தும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: கல்யாணம் ஆகி பல மாதங்கள் ஆகியும் பரணி கர்ப்பமாகாததை கிண்டல் செய்து சௌந்தரபாண்டி சண்முகத்தை அசிங்கப்படுத்துகிறார்.

அண்ணா சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: சண்முகத்தை அவமானப்படுத்தும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இசக்கிக்கு மருந்து கொடுக்க சௌந்திரபாண்டி வீட்டில் ஏற்பாடுகள் நடந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அசிங்கப்படும் சண்முகம்
அதாவது, மருந்து கொடுக்க வந்த பாட்டி இசக்கிக்கு முன்னாடி உனக்கு தான் கல்யாணம் ஆச்சு முதல்ல உனக்கு தான் மருந்து கொடுத்து இருக்கணும் என்று பரணியிடம் பேச சௌந்தரபாண்டியன் மற்றும் பாண்டியம்மா என இருவரும் சேர்ந்து கொண்டு முத்துப்பாண்டி ஆம்பள.. கல்யாணமானதும் பொண்டாட்டி கர்ப்பமாகிட்டா என்று சண்முகத்தை அசிங்கப்படுத்துவது போல் பேச பரணி சண்முகத்துக்கு ஆதரவாக பேசுகிறாள்.