அண்ணா சீரியல் மே 07 எபிசோட்: பரணியை விழுந்து விழுந்து கவனிக்கும் சண்முகம்…கொளுத்தி போட வந்த சௌந்தரபாண்டி! -
நாட்டு வைத்திய பாட்டியை வர வைத்து, பரணிக்கு கட்டு போட்டு விட, பாட்டி மூணு நாளைக்கு கையை அசைக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு செல்கிறார்.

பரணியை விழுந்து விழுந்து கவனிக்கும் சண்முகம்.. கொளுத்தி போட வந்த சௌந்தரபாண்டி - அண்ணா சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன?
சண்முகம் கொடுத்த உறுதி
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், சண்முகம் பரணியிடம் உன்னை அமெரிக்கா அனுப்பி வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று சொல்லிய நிலையில், இன்று மே 7 நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, நாட்டு வைத்திய பாட்டியை வர வைத்து, பரணிக்கு கட்டு போட்டு விட, பாட்டி மூணு நாளைக்கு கையை அசைக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு செல்கிறார். பரணி நீ வேணும்னு தான் இப்படி பண்ண என்று சண்முகத்திடம் சண்டையிட, சண்முகம் கண்டிப்பா உன்னை அமெரிக்கா அனுப்பி வைப்பேன் என்று உறுதி அளிக்கிறான்.