அண்ணா சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: சண்முகம் செய்த யாகம்.. பரணிக்கு உடைந்த கை, நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: சண்முகம் செய்த யாகம்.. பரணிக்கு உடைந்த கை, நடந்தது என்ன?

அண்ணா சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: சண்முகம் செய்த யாகம்.. பரணிக்கு உடைந்த கை, நடந்தது என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Published May 05, 2025 03:33 PM IST

அண்ணா சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: சண்முகம் பூஜையில் கலந்து கொள்ள சாமியார் பூஜையை முடித்து, ஒரு கலசத்தை சண்முகம் கையில் கொடுத்து, இதை கடலில் கலக்க வேண்டும் என்று சொல்கிறார்.

அண்ணா சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: சண்முகம் செய்த யாகம்.. பரணிக்கு உடைந்த கை, நடந்தது என்ன?
அண்ணா சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: சண்முகம் செய்த யாகம்.. பரணிக்கு உடைந்த கை, நடந்தது என்ன?

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் வைகுண்டம் வீட்டில் யாக பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அதிகாலையில் வீடு முழுக்க ஒரே புகைமூட்டமாக இருக்க சண்முகம் பரணி ஆகியோர் என்ன ஆச்சு என்று அதிர்ச்சி அடைய, வைகுண்டன் நான்தான் பூஜைக்கு ஏற்பாடு செய்தேன் என சொல்கிறார்.

சண்முகம் பூஜையில் கலந்து கொள்ள சாமியார் பூஜையை முடித்து, ஒரு கலசத்தை சண்முகம் கையில் கொடுத்து, இதை கடலில் கலக்க வேண்டும் என்று சொல்கிறார். பாத்திரத்தை கீழே வைக்காமல் கொண்டு போய் கலக்க வேண்டும் அப்போதுதான் முழு பலன் கிடைக்கும் என்று கூறி விடுகிறார்.

இந்த சமயத்தில் சௌந்தரபாண்டி வீட்டுக்கு வர யாகம் நடப்பதை பார்த்த சனியன் உங்களுக்கு பில்லி சூனியம் வைப்பதற்காகத்தான் இந்த யாகம் நடக்கிறது என சொல்ல, சௌந்தரபாண்டி முதலில் நம்ப மறுக்க, பிறகு சண்முகம் கலசத்தை எடுத்துக் கொண்டு செல்லும்போது சௌந்தரபாண்டியை பார்த்து தொலைஞ்ச என்பது போல சைகை காட்டி விட்டு சென்றார். இதைப்பார்த்த சௌந்தரபாண்டிக்குள் ஒரு பயம் உருவாகிறது.

பிறகு பரணி ஹாஸ்பிடலுக்கு கிளம்ப தயாராக சண்முகம் இல்லாததால், அவளே வண்டியை எடுத்துக் கொண்டே கிளம்புகிறாள். வண்டி ஓட்டத் தெரியாமல் பரணி கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. விஷயம் தெரிஞ்சு சண்முகம் பதறி அடித்து ஓடி வர, என் பொண்ணுக்கு கை உடைந்து அவ அமெரிக்கா போகக்கூடாது என்பதற்காக தான் இந்த யாகத்தை செஞ்சிருக்க என்று பழி போடுகிறார் செளந்தரபாண்டி!

வேலைக்காரியாக வீரா

பரணியும் அது உண்மையாக இருக்கலாம் என்று நம்ப, சண்முகம் சத்தியமா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்பா தானே இந்த யாகத்துக்கு ஏற்பாடு செய்தார் என சொல்லி புரிய வைக்க முயற்சி செய்கிறான்.

அதைத் தொடர்ந்து வைஜெயந்தி தனது வீட்டில் வேலைக்காரி வரவில்லை என்பதால் வீராவை வீட்டுக்கு வரவைத்து வீட்டு வேலைகளை செய்ய சொல்ல, வீரா செய்ய முடியாது என மறுக்கிறாள். வைஜெயந்தி வேலையை விட்டு தூக்கிடுவேன் என்று மிரட்ட, அப்படி தூக்கினா நீங்கதான் தோத்துப்போனதா அர்த்தம் என்று பதிலடி கொடுக்கிறாள் வீரா!

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.