ஆபிஸுக்கு வரும் ஆனந்தி.. கடுப்பான கருணாகரன்.. மகேஷ் போட்ட அதிரடி உத்தரவு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
ஆபிஸுக்கு வரும் ஆனந்தி.. கடுப்பான கருணாகரன்.. மகேஷ் போட்ட அதிரடி உத்தரவு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட் குறித்துப் பார்ப்போம்.

ஆபிஸுக்கு வரும் ஆனந்தி.. கடுப்பான கருணாகரன்.. மகேஷ் போட்ட அதிரடி உத்தரவு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
சன் டிவியில் இரவு 9 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகும் சீரியல் சிங்கப்பெண்ணே. அதில் நவம்பர் 28ஆம் தேதிக்குண்டான எபிசோடு புரோமோ வெளியாகியுள்ளது.
இன்றைய நாளுக்குண்டான புரோமோ:
சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய நாளுக்கான புரோமோவில் அன்புவும் ஆனந்தியும், தங்களது பழைய கார்மென்ட்ஸ் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களைப் பார்த்து ஷாக் ஆகிறார், மேல் அதிகாரி கருணாகரன். மேலும், ’உங்களைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடுவேன்’ என்றும்; ’அப்போது தான் நீங்கள் வெளியில் போவீர்கள்’ எனச் சொல்கிறார்.
உடனே, அன்பு, ‘என்ன சார் நேற்று வாங்கியது மறந்துபோயிடுச்சா’ எனக் கேட்கிறார். அந்த வார்த்தையைக் கேட்டதும் அருகில் இருக்கும் சகப்பணியாளர்கள் சிரிக்கின்றனர். மேலும் கருணாகரன் கையில் கட்டு போடப்பட்டு இருப்பது வெளியில் நன்கு தெரிகிறது.
