பொன்னியின் செல்வன் பட பாடல் காப்புரிமை விவகாரம்.. ஏ.ஆர். ரஹ்மான் அபராதம் செலுத்த இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பொன்னியின் செல்வன் பட பாடல் காப்புரிமை விவகாரம்.. ஏ.ஆர். ரஹ்மான் அபராதம் செலுத்த இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

பொன்னியின் செல்வன் பட பாடல் காப்புரிமை விவகாரம்.. ஏ.ஆர். ரஹ்மான் அபராதம் செலுத்த இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

Malavica Natarajan HT Tamil
Published May 06, 2025 02:23 PM IST

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘வீரா ராஜ வீரா’பாடல் காப்புரிமை வழக்கில் ஏ.ஆர். ரஹ்மான் 2 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என விதிக்கப்பட்ட உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றடிவிசன்அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.

பொன்னியின் செல்வன் பட பாடல் காப்புரிமை விவகாரம்.. ஏ.ஆர். ரஹ்மான் அபராதம் செலுத்த இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்
பொன்னியின் செல்வன் பட பாடல் காப்புரிமை விவகாரம்.. ஏ.ஆர். ரஹ்மான் அபராதம் செலுத்த இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

பொன்னியின் செல்வன் பாடல் விவகாரம்

முன்னதாக, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பயன்படுத்திய ‘வீரா ராஜ வீரா’ பாடலின் இசை தாகருக்கு சொந்தமானது என படக்குழு தரப்பு ஒப்புக்கொண்டதால் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ரூ.2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடமும், ரூ .2 லட்சத்தை தாகர் பெயரிலும் டெபாசிட் செய்யவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இடைக்கால தடை

இதனை எதிர்த்து, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மேல்முறையீட்டு மனுவை ஏற்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவிற்கு தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிசங்கர் தலைமையிலான டிவிஷன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பகிரங்க குற்றச்சாட்டு

முன்னதாக, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், ‘வீரா ராஜ வீரா’ பாடல் தொடர்பாக, பத்மஸ்ரீ விருது பெற்ற ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் தொடர்ந்த வழக்கில், இந்த பாடல் தனது தந்தை நசீர் ஃபயாஸ் வாசிபுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் இயற்றப்பட்ட ’சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து நகலெடுக்கப்பட்டது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

வெவ்வேறு பாடல் வரிகள் இருந்தபோதிலும், பாடலின் இசை அமைப்பு, தாளம் ஆகியவை அசல் 'சிவ ஸ்துதி இசையமைப்பை' நெருக்கமாக ஒத்திருப்பதாகவும், அது உரிய காரணமின்றி பயன்படுத்தப்பட்டதாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் கூறியிருந்தார்.

ஒப்புக்கொண்ட படக்குழு

இதனை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரதீபா எம்.சிங் தலைமையிலான பெஞ்ச் விசாரிக்கையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தாகரின் பணிக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை என்றும், பின் தாகர், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது, தயக்கத்துடன் அதைப் பயன்படுத்தியதை ஒத்துக்கொண்டுள்ளனர்" என்று கூறியது.

காப்புரிமை

இதுதொடர்பாக நீதிபதி பிரதீபா சிங் அளித்த தீர்ப்பில், ‘இந்துஸ்தானி பாரம்பரிய இசைக்கு காப்புரிமை சட்டத்தின்கீழ் பாதுகாப்புக்கு உரிமை உண்டு. அது இசையமைப்பாளரின் அசல் படைப்பாக இருக்கும் வரை அதற்கு காப்புரிமை உண்டு. இசையமைப்பாளருக்கு காப்பு உரிமைகளின் கீழ் அனைத்து உரிமைகளையும் பயன்படுத்த உரிமை உண்டு" என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கிரெடிட் தர வேண்டும்

அதேபோல், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், அந்தப் பாடலில் திருத்தங்களைச் செய்து வெளியிடுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தப் பாடலுக்கான கிரெடிட்டை வழங்குமாறும் கூறியது. தற்போதுள்ள ஸ்லைடுக்கு பதிலாக, அனைத்து ஓடிடி மற்றும் ஆன்லைன் தளங்களிலும் இப்பாடலின் கிரெடிட் தொடர்பாக ஒரு புதிய ஸ்லைடு வைக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.

மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ரூ.2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடமும், ரூ .2 லட்சத்தை தாகர் பெயரிலும் டெபாசிட் செய்யவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.