13 Years Of Deiva Thirumagal: குழந்தையுள்ளம் கொண்டவருக்கு தாய்போல் பாசம் காட்டும் மகளின் கதை 'தெய்வத் திருமகள்’
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  13 Years Of Deiva Thirumagal: குழந்தையுள்ளம் கொண்டவருக்கு தாய்போல் பாசம் காட்டும் மகளின் கதை 'தெய்வத் திருமகள்’

13 Years Of Deiva Thirumagal: குழந்தையுள்ளம் கொண்டவருக்கு தாய்போல் பாசம் காட்டும் மகளின் கதை 'தெய்வத் திருமகள்’

Marimuthu M HT Tamil Published Jul 15, 2024 07:05 AM IST
Marimuthu M HT Tamil
Published Jul 15, 2024 07:05 AM IST

13 Years Of Deiva Thirumagal: குழந்தையுள்ளம் கொண்டவருக்கு தாய்போல் பாசம் காட்டும் மகளின் கதை 'தெய்வத் திருமகள்’. இப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

13 Years Of Deiva Thirumagal: குழந்தையுள்ளம் கொண்டவருக்கு தாய்போல் பாசம் காட்டும் மகளின் கதை 'தெய்வத் திருமகள்’
13 Years Of Deiva Thirumagal: குழந்தையுள்ளம் கொண்டவருக்கு தாய்போல் பாசம் காட்டும் மகளின் கதை 'தெய்வத் திருமகள்’

தெய்வத்திருமகள் படத்தின் கதை: 

குழந்தையுள்ளம் கொண்டவருக்கு தாய்போல் பாசம் காட்டும் மகளின் கதை தான், 'தெய்வத் திருமகள்’. படத்தின்படி, 7 வயதுடைய குழந்தையின் மனநிலையில் இருக்கிறார் கதையின் நாயகன், கிருஷ்ணா. இவர் விக்டருடைய சாக்லேட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அப்போது ஒருநாள் கிருஷ்ணாவுக்கு அவரது காதல் மனைவி பானுமதி மூலம் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பானுமதி இறந்துவிடுகிறாள். அதைப் புரிந்துகொள்ள முடியாத கிருஷ்ணா, பானுமதி கடவுளிடம் சென்றுவிட்டதாக நம்புகிறார்.

பின் தன் மகளுக்கு நிலா என்று பெயர் வைத்து வளர்க்கிறார். சாக்லேட் நிறுவன உரிமையாளர் விக்டர், அவரை நன்கு பரமாரித்துக்கொள்கிறார்.

நிலாவை பள்ளிக்கு அனுப்பும் கிருஷ்ணா, அங்கு விடச்செல்லும்போது பள்ளியின் துணை முதல்வர் ஸ்வேதா ராஜேந்திரனால் அடையாளம் காணப்படுகிறார். ஸ்வேதா ராஜேந்திரனுக்கு அது தன் அக்கா பானுமதியின் காதல் கணவர் என்றும், நிலா, இறந்துபோன அக்கா பானுமதியின் மகள் என்றும் தெரிகிறது.

ஒரு கட்டத்தில் ஸ்வேதா, தன் அக்கா மகள் நிலாவை கிருஷ்ணா எப்படி பார்த்துக்கொள்வார் எனப் பதறுகிறார். இந்நிலையில் சாக்லேட் நிறுவன உரிமையாளர் விக்டரிடம் சென்று பேசும் ஸ்வேதா, கிருஷ்ணாவையும் நிலாவையும் தாங்கள் பராமரித்துக்கொள்வதாகக் கூறி, சென்னைக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் ராஜேந்திரன் கிருஷ்ணாவை சென்னைக்கு அழைத்து வந்து காரில் இருந்து வெளியே இறக்கிவிட்டுவிடுகிறார். பேத்தி நிலாவை மட்டும் தன்னுடன் வைத்துக்கொள்கிறார்.

அப்போது சென்னை வீதிகளில் சுற்றும் கிருஷ்ணா, வழக்கறிஞர்களான அனுராதா ரகுநாதனிடமும் வினோத்திடம்சென்று சேர்கிறார்.

ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவைத் தேடி சென்னை வரும் விக்டர், நிலாவைத் தொலைத்து தனிமையில் இருக்கும் கிருஷ்ணாவைப் பார்க்கிறார். வழக்கறிஞர் அனுராதா ரகுநாதனிடம் நிலாவை மீட்டு கிருஷ்ணாவிடம் ஒப்படைக்க உதவுமாறு கேட்கிறார்.

இந்நிலையில் அனுராதா ரகுநாதன், ராஜேந்திரனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்து, அவரை நீதிமன்றத்திற்கு வரவழைக்கிறார். இரு தரப்பும் குழந்தை தங்களுக்கு வேண்டுமென்று மாறி மாறி வாதிடுகின்றனர். 

இறுதியில் உயர் நீதிமன்றத்தில் நிலாவைப் பார்த்ததும் கிருஷ்ணாவும், நிலாவும் பேசிக்கொள்ளும் பரிபாஷை, பலரை கண்கலங்கச் செய்கிறது. இதைப் பார்த்த ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர் பாஷ்யம் வழக்கை, திரும்பப்பெற்று, நிலாவை அவரது தந்தை கிருஷ்ணாவிடம் சேர்க்குமாறு கோருகிறார். அதன்பின், நிலாவுடன் சிறிதுநேரம் செலவிட்டபின், கிருஷ்ணா, தன் மகளின் படிப்புக்காக ஸ்வேதாவிடம் விட்டுச் செல்கிறார். பின், கிருஷ்ணா, தன் பழைய பணிகளைச் செய்ய அவலாஞ்சிக்கு செல்கிறார். 

தெய்வத் திருமகள் படத்தில் நடித்தவர்கள் விவரம்:

இப்படத்தில் கிருஷ்ணாவாக விக்ரமும், நிலாவாக பேபி சாராவும், அனுராதா ரகுநாதனாக அனுஷ்கா ஷெட்டியும்,ஸ்வேதா ராஜேந்திரனாக அமலா பாலும் நடித்திருந்தனர். ராஜேந்திரனாக சச்சின் கெடேகரும், விக்டராக கிருஷ்ண குமாரும், வழக்கறிஞர் பாஷ்யமாக நாசரும் நடித்திருந்தனர்.

தெய்வத்திருமகள் படத்தின் வெற்றிக்கு உதவிய இசை:

குழந்தை மனதில் இருக்கும் தந்தைக்கும், அவரது குழந்தைக்கும் இடையிலான பிணைப்பை உணர்ந்து இசையமைத்து இருந்தார், ஜி.வி.பிரகாஷ். இப்படத்தில், ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு, கதை சொல்லப்போறேன், விழிகளில் ஒரு வானவில் என அனைத்தும் மெலோடி வரிசையில் ஹிட்டாகின.

படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனாலும், தெய்வத் திருமகள் எப்போது பார்த்தாலும் ரசிக்கப்படும் திரைக்கவிதை!