Amudhavum Annalakshmiyum: உண்மையை உடைத்த லாரி டிரைவர்..
அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமுதா உடம்பில் செந்தில் அப்பா வந்து போனதும் அன்னலட்சுமி அமுதாவிடம் நீ எங்க மனசை மட்டுமில்ல மேல இருக்குற அவுக மனசையும் ஜெயிச்சிட்ட என சொல்லி நெகிழ்கிறாள்.
அடுத்து போலிஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு வந்து மோதிய லாரி டிரைவர் பழனி பெயரை சொன்னதாக சொல்ல உமா தங்கள் மேல் அமுதா அநியாயமாக பழி போடுவதாக சொல்கிறாள்.
உடனே சிதம்பரம் என் பையனுக்கு ஒன்ணுன்னா மகள் மருமகன்னு பாக்க மாட்டேன் போட்டு தள்ளிருவேன் என கோபமாக சொல்ல உமா அதிர்ச்சி அடைகிறாள்.
இங்கே லாக்கர் எங்கே என அமுதா கேட்க அன்னம் காட்ட அதன் ரகசிய எண் மாமாவுக்கு தான் தெரியும் அதனால் அவர் இறந்த பிறகு அதை திறக்கவே இல்லை என அன்னம் சொல்ல சின்னா மாமா உன் கிட்ட அந்த நம்பரை சொல்லயா என கேலி செய்ய அமுதா யோசிக்கிறாள்.
அடுத்து நம்பர் ஞாபகம் வந்தவளாக லாக்கரை திறக்க போக அனைவரும் ஆச்சரியமாக பார்க்க
அமுதா சரியாக நம்பரை போட்டு லாக்கரை திறக்கிறாள். அதிலிருந்து அமுதா மூலப்பத்திரத்தை எடுத்து பார்க்கிறாள்.
வடிவேலு வீட்டில் நடந்ததை குமரேசன் குடும்பத்தினரிடம் சொல்ல, குமரேசன் என்னடா சந்திரமுகி கதை சொல்ற என கேலி செய்கிறான். மேலும் உமா வடிவேலுவிடம் யார் யார்கிட்டயோ உங்க குடும்ப விஷயத்தை கறந்து கதை விட்டிருக்கா என சொல்ல வடிவேலு யோசிக்கிறான்.
அடுத்து பழனி வடிவேலுவிடம் அமுதா குட்டய குழப்புறா நாளைக்கு தாலி பிரிச்சி கோக்குறப்ப உங்க வீட்டுல என்ன நடக்குதுன்னு மட்டும் பாரு என சொல்ல வடிவேலு சந்தோஷம் அடைகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
டாபிக்ஸ்