கன்னட படத்திலிருந்து நீக்கப்பட்ட பாடல்.. ‘ஆட்டம் காட்டி மன்னிப்பு கேட்டார் சோனு நிகாம்’- தயாரிப்பாளர்கள் விளக்கம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கன்னட படத்திலிருந்து நீக்கப்பட்ட பாடல்.. ‘ஆட்டம் காட்டி மன்னிப்பு கேட்டார் சோனு நிகாம்’- தயாரிப்பாளர்கள் விளக்கம்

கன்னட படத்திலிருந்து நீக்கப்பட்ட பாடல்.. ‘ஆட்டம் காட்டி மன்னிப்பு கேட்டார் சோனு நிகாம்’- தயாரிப்பாளர்கள் விளக்கம்

Malavica Natarajan HT Tamil
Published May 07, 2025 07:17 AM IST

‘குலதல்லி கீல்யாவுதோ’படத்திற்காக சோனு நிகாம் பாடிய ‘மனசு ஹாட்ததே வயசு காட்ததே…’ என்ற பாடலை படக்குழு, நீக்கியுள்ளது. மேலும், அதே பாடலை சேதன் சோஸ்காவை பாடவைத்து விரைவில் வெளியிட உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

கன்னட படத்திலிருந்து நீக்கப்பட்ட பாடல்.. ‘ஆட்டம் காட்டி மன்னிப்பு கேட்டார் சோனு நிகாம்’- தயாரிப்பாளர்கள் விளக்கம்
கன்னட படத்திலிருந்து நீக்கப்பட்ட பாடல்.. ‘ஆட்டம் காட்டி மன்னிப்பு கேட்டார் சோனு நிகாம்’- தயாரிப்பாளர்கள் விளக்கம்

சோனு நிகாம் பாடல் நீக்கம்

இந்நிலையில், தற்போது, ‘குலதல்லி கீல்யாவுதோ’ படத்திற்காக சோனு நிகாம் பாடிய ‘மனசு ஹாட்ததே வயசு காட்ததே…’ என்ற பாடலை நீக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அதே பாடலை சேதன் சோஸ்காவை பாட வைத்து விரைவில் வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

‘சோனு நிகாம் மரியாதையை இழந்துவிட்டார்’

இதுகுறித்து இயக்குனர் ராம்நாராயண் கூறுகையில், ‘சோனு நிகாம் சமீபத்தில் பேசிய சில வார்த்தைகள் அவரது மோசமான மனநிலையைக் காட்டுகின்றன. அப்படிப்பட்டவர் பாடிய பாடலை மக்கள் கேட்க விரும்புவார்களா? கன்னடர்களுக்கும், கன்னட மொழிக்கும் பெரும் அவமானம் செய்த சோனு, அந்த மரியாதையை இழந்துவிட்டார். எனவே, அவர் பாடிய பாடலை மாற்ற முடிவு செய்துள்ளோம். அவருக்குப் பதிலாக அதே பாடலை சேதன் சோஸ்காவை பாட வைத்து வெளியிட உள்ளோம்’ என்றார்.

‘ஒரு பாடலுக்கு நிறைய சிரமப்படுத்தினார்’

இந்தப் பாடலை சோனு மூன்று மாதங்களுக்கு முன்பு பாடியதாகத் தெரிகிறது. ‘பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மனோமூர்த்தி, யோகராஜ் பட் மற்றும் சோனு நிகாம் ஆகியோரின் அற்புதமான கூட்டணி. மூவரும் சேர்ந்து செய்த பாடல்கள் வெற்றி பெற்றுள்ளன. அதே காரணத்திற்காக அவரிடம் இந்தப் பாடலைப் பாடச் சொன்னோம். மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தப் பாடல் பாடப்பட்டது.

சுமார் ஒன்றரை மாதங்கள் சோனு நிறைய ஆட்டம் காட்டி, இந்தப் பாடலைப் பாடினார். இந்தப் பாடலுக்கு அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று தெரியவில்லை. முழுப் பொறுப்பையும் மனோமூர்த்தி ஏற்றுக்கொண்டார். இங்கே நஷ்டத்தை விட அவர் செய்தது பெரிய தவறு.

தவறு செய்துவிட்டு மன்னிப்பு

தவறு செய்துவிட்டு கடைசியில் மன்னிப்பு கேட்டால் எப்படி? இதுபோன்ற சம்பவங்களை எவ்வளவு பொறுத்துக்கொள்வது? எவ்வளவு மன்னிப்பது? எங்கள் நிலைப்பாடு தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்தப் பாடலை நீக்கியுள்ளோம். இந்த விஷயத்தை யோகராஜ் பட் மற்றும் மனோமூர்த்திக்கும் சொல்லியிருக்கிறோம். அவர்களும் தங்கள் ஒப்புதலைத் தெரிவித்துள்ளனர்’ என்றார்.

மன்னிப்பு பிடிக்கவில்லை

தயாரிப்பாளர் சந்தோஷ் கூறுகையில், ‘சோனு மன்னிப்பு கேட்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. அவரது நடத்தை சரியில்லை. எனவே, அவர் பாடிய பாடலை நீக்க முடிவு செய்துள்ளோம். கன்னடர்களாக அவரது நடத்தை மிகுந்த வேதனையைத் தந்துள்ளது. நாங்கள் விளம்பரத்திற்காக இப்படிச் செய்யவில்லை’ என்றார்.

குலதல்லி கீல்யாவுதோ படம்

‘குலதல்லி கீல்யாவுதோ’ திரைப்படம் மே 23 அன்று மாநிலம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படக்குழு தீவிர விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ‘குலதல்லி கீல்யாவுதோ’ படத்தில் காமெடி கில்லாடிஸ் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் மடேனூர் மனு, ராமாச்சார் சீரியல் மூலம் கவனத்தை ஈர்த்த மௌனா குட்கேமனே, சரத் லோஹிதாஷ்வா, தபலா நாணி, சோனல் மொன்டெரோ, கரிசுப்பு, டிராகன் மஞ்சு, சீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.