‘அந்த விஷயத்தில் நான் கர்நாடகாவிற்கு ஆதரவாக நிற்கிறேன்.. ஆந்திராவிற்கு ஆதரவாக நிற்கிறேன்’- கமல்ஹாசன் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘அந்த விஷயத்தில் நான் கர்நாடகாவிற்கு ஆதரவாக நிற்கிறேன்.. ஆந்திராவிற்கு ஆதரவாக நிற்கிறேன்’- கமல்ஹாசன் பேச்சு!

‘அந்த விஷயத்தில் நான் கர்நாடகாவிற்கு ஆதரவாக நிற்கிறேன்.. ஆந்திராவிற்கு ஆதரவாக நிற்கிறேன்’- கமல்ஹாசன் பேச்சு!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 08, 2025 10:40 AM IST

தென் மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார்.

‘அந்த விஷயத்தில் நான் கர்நாடகாவிற்கு ஆதரவாக நிற்கிறேன்.. ஆந்திராவிற்கு ஆதரவாக நிற்கிறேன்’- கமல்ஹாசன் பேச்சு!
‘அந்த விஷயத்தில் நான் கர்நாடகாவிற்கு ஆதரவாக நிற்கிறேன்.. ஆந்திராவிற்கு ஆதரவாக நிற்கிறேன்’- கமல்ஹாசன் பேச்சு! (PTI)

இந்த நிலையில் அவரின் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என்று கர்நாடக வர்த்தக சபை கூறியது. கர்நாடக நீதிமன்றமும் கமலை மன்னிப்புக்கேட்கச் சொல்ல ஆனால் கடைசி வரை கமல் மன்னிப்புகேட்க வில்லை. இதனால் கடந்த ஜூன் 5 அன்று கர்நாடகா தவிர்த்து பிற மாநிலங்களில் தக் லைஃப் படம் வெளியானது.

இந்தப்படத்தை புரோமோட் செய்யும் போது கமல்ஹாசன் கன்னட மொழி சர்ச்சையை அசால்ட்டாக கையாண்டாலும், இந்தி திணிப்பு பிரச்சினையில், அவர் கர்நாடகாவிற்கு ஆதரவாகவே குரல் கொடுத்தார்.

இந்தி திணிப்பு கூடாது

இது குறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேசிய போது, ‘நான் ஏக் துஜே கே லியே…’ படத்தில் நடித்தவன்; அந்தப்படம் தமிழ் பையனுக்கும், இந்தி தோழிக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

திணிப்பு இல்லாமல், நாங்கள் கற்றுக்கொள்வோம். நீங்கள் திணிக்க வேண்டாம், ஏனென்றால், இது இறுதியில் கல்வி; அதற்கான மிகவும் சிறிய வழியைதான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் வழியில் தடைகளை ஏற்படுத்த வேண்டாம்" என்றார்.

கர்நாடகாவுடன் நிற்கிறேன்

இந்த விவகாரத்தில் நான் பஞ்சாபுடன் நிற்கிறேன். நான் கர்நாடகாவுடன் நிற்கிறேன். நான் ஆந்திராவுடன் நிற்கிறேன். நீங்கள் உண்மையிலேயே சர்வதேச முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்; ஆங்கிலம் போதுமானதாகத் தெரிகிறது.

நீங்கள் ஸ்பானிஷ் அல்லது சீன மொழியை கூட கற்றுக்கொள்ளலாம். ஆனால், நடைமுறையில் 350 ஆண்டுகால ஆங்கிலக் கல்வியை நாம் மெதுவாக உறுதியாக கற்றுவைத்திருக்கிறோம். எனவே நீங்கள் திடீரென்று அதை மாற்றும்போது, மீண்டும் அனைத்தையும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.

இது தமிழகத்தில் தேவையில்லாமல் பலரை எழுத்தறிவு இல்லாதவர்களாக ஆக்கும். திடீரென்று இந்தியை கட்டாயப்படுத்தி, விந்திய மலைக்கு அப்பால் உங்களுக்கு வேலை கிடைக்காது என்று சொன்னால், நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? அங்கு என் மொழியின் நிலை என்ன? என்னுடைய மொழியும் 22 மொழிகளில் ஒன்றுதானே? உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன.’ என்று பேசினார்.