300 கோடி கிளப்பில் இணைந்தாரா சிவகார்த்திகேயன்? அமரன் 20வது நாள் வசூல் சொல்வது என்ன?
நடிகர் சிவகார்த்திகேயனின் அரமன் திரைப்படம் வெளியான 20வது நாளில் 300 கோடி வசூலை அடைந்ததா இல்லையா என்பது குறித்த பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் ராணுவத்தில் வீரமரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருக்கிறார்.
வசூலில் கெத்து காட்டும் அமரன்
அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகை பண்டிகையன்று அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் வெளியாகும் முன்னரே ப்ரீ புக்கிங்கில் அதிக வசூலைப் பெற்ற நிலையில், வெளியான 20 நாட்களிலும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. படம் வெளியாகி 20 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ரூ.1.33 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இதுவரை மொத்தமாக ரூ. 151..48 கோடி வசூலைப் பெற்றுள்ளது.