‘ஜெய் ஸ்ரீ ராம்’- னு சொல்ல மாட்டாங்க.. இவங்க சீதையா? - இந்த பொண்ண தடை பண்ணுங்க;அமரன் ரிலீஸ் ஆக” -சர்ச்சையில் சாய்பல்லவி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘ஜெய் ஸ்ரீ ராம்’- னு சொல்ல மாட்டாங்க.. இவங்க சீதையா? - இந்த பொண்ண தடை பண்ணுங்க;அமரன் ரிலீஸ் ஆக” -சர்ச்சையில் சாய்பல்லவி

‘ஜெய் ஸ்ரீ ராம்’- னு சொல்ல மாட்டாங்க.. இவங்க சீதையா? - இந்த பொண்ண தடை பண்ணுங்க;அமரன் ரிலீஸ் ஆக” -சர்ச்சையில் சாய்பல்லவி

Kalyani Pandiyan S HT Tamil
Oct 28, 2024 06:18 PM IST

‘ஜெய் ஸ்ரீராம்’என்று சொல்ல மறுக்கும் சாய்பல்லவி நடித்த அமரன் படத்தையும், அவரை தடை செய்யுங்கள் என்று சமூகவலைதளங்களில் கமெண்டுகள் பதிவிடப்பட்டு இருக்கின்றன.

‘ஜெய் ஸ்ரீ ராம்’- னு சொல்ல மாட்டாங்க.. இவங்க சீதையா? - இந்த பொண்ண தடை பண்ணுங்க;அமரன் ரிலீஸ் ஆக”  -சர்ச்சையில் சாய்பல்லவி
‘ஜெய் ஸ்ரீ ராம்’- னு சொல்ல மாட்டாங்க.. இவங்க சீதையா? - இந்த பொண்ண தடை பண்ணுங்க;அமரன் ரிலீஸ் ஆக” -சர்ச்சையில் சாய்பல்லவி

பிரபல நடிகையான சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கும் ‘அமரன்’ திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப்படம் தொடர்பான புரோமோஷன் பணிகளில் படக்குழு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், சாய்பல்லவி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

என்ன நடந்தது?

ராணா, சாய் பல்லவி நடித்த ‘விராத பர்வம்’ படம் தொடர்பாக கடந்த 2022ம் ஆண்டு அளித்த நேர்காணல் ஒன்றில், “ காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் தீவிரவாதிகளால், இந்துக்கள் கொல்லப்பட்டதை காட்டி இருப்பார்கள். அது பயங்கரவாதம் என்றால், கொரோனா காலத்தில் பசுவை இழுத்துச் சென்ற இஸ்லாமியர் மீது கொடூர தாக்குதல் நடத்தி ‘ ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்பியது மட்டும் சரியா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம். இங்கு அனைவரும் சமமானவர்கள். ஆகையால், சாதி, மதத்தால் மக்களை பிரிப்பது தவறானது” என்று பேசினார்.

அதே போல, பாகிஸ்தானில் இருப்பவர்கள் நமது இந்திய ராணுவத்தை தீவிரவாதிகள் போல பாவிக்கிறார்கள். ஆனால், நமக்கு அவர்கள்தான் அப்படி. ஆகையால், கண்ணோட்டம் மாறுகிறது. எனக்கு வன்முறை புரியவில்லை என்று பேசி இருந்தார். இது அந்த சமயத்தில் சர்ச்சையை உருவாக்கியது. பல்வேறு தரப்பினர் சாய்பல்லவியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. இதனையடுத்து அதற்கு விளக்கம் அளித்த சாய்பல்லவி தன்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும் எல்லா மனிதர்களும் இங்கு ஒன்றுதான். அவர்களை சாதி, மதம், இனத்தால் பிரிப்பது சரியானது அல்ல என்பதைத்தான் நான் அந்த நேர்காணலில் கூறியிருந்தேன்” என்றார்.

இந்த நிலையில் தற்போது அமரன் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, சாய் பல்லவியின் இந்த பழைய நேர்காணலை சமூக வலைதளங்களில் பகிர்ந்த சிலர், ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல மறுக்கும் சாய்பல்லவி ராமாயாணா படத்தில் ஏன் சீதாதேவியாக நடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, அமரன் படத்தையும், அவரையும் தடை செய்ய வேண்டும் என்று எக்ஸ் வலைதளத்தில் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. 

 

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தோடு சேர்த்து, சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ், நிறுவனம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரிலும், சில காட்சிகள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முடிந்த ’அமரன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது. அதன் பின்னர், போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் அமரன் திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அமரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது. ஐந்து மொழிகளிலும் பரவலான வரவேற்பினைப் பெற்று வருகிறது.

அமரன் படத்தின் பட்ஜெட் என்ன?; சிவகார்த்திகேயனின் சம்பளம் என்ன?:

இப்படம் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய மேஜர் முகுந்த் வரதராஜனின், ’இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ என்ற புத்தகத்தில் இருந்து, இக்கதையை எழுதி, திரைக்கதை அமைத்துள்ளார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படம் ரூ. 150 கோடி முதல் 200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 கோடி வரை பெறுவதாகத் தெரியவருகிறது. மேலும், நவரச நாயகன் கார்த்திக் நடித்த அமரன் படக்குழுவினரிடம், அனுமதிபெற்றபின், இப்படத்தின் பெயர் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.

மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், இன்னும் பெயர் சூட்டாத தனது 23ஆவது படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி, இப்படத்தைத் தொடர்ந்து, ’தண்டேல்’ என்னும் படத்தில் சத்யா என்னும் கேரக்டரிலும், இந்தியில் ரன்பீர் கபூருடன் ராமாயணாவில் சீதாவாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.