ஃபீல்டு அவுட் ஆன புஷ்பா.. தொடர் சரிவில் வசூல்.. 34 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் நிலவரம்..
புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 34 நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் வசூல் நிலவரத்தை காணலாம்.
தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ. 294 கோடி வசூலித்து, ஓபனிங் நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்ற புதியதொரு சாதனை புரிந்துள்ளது. இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்திற்கும் இல்லாத அளவிற்கான ஓபனிங் கிடைத்து, இரண்டு மொழிகளில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.
புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்
பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் Sacnilk.com கூற்றுப்படி, படி, புஷ்பா 2 ரிலீசான 34வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 1441 கோடி வசூலித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உலக அளவில் வெளியிடப்பட்ட புஷ்பா திரைப்படம் 34வது நாளான நேற்று சுமார் ரூ.1710 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இருப்பினும் புத்தாண்டிற்கு பின் வசூலில் குறைந்து வரும் நிலையில், புஷ்பா 2 திரைப்படம் நேற்று தமிழ்நாட்டில் வெறும் 8 லட்ச ரூபாய் தான் வசூலித்தது, அதேபோல தெலுங்கு பேசும் மாநிலங்களில் வெறும் 59 லட்சம் ரூபாய் தான் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 2 ரீலோடட் வெர்ஷன்
புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வெளியாகி பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளது. படம் வெளியான சமயத்தில் அதன் நீளம் 3 மணி நேரம் 15 நிமிடங்களாக இருந்தது. படம் நீளமாக இருந்தது என்றாலும், அல்லு அர்ஜுனின் நடிப்பு பார்வையாளர்களை சலிப்படைய வைக்கவில்லை. எனவே தயாரிப்பாளர்கள் படத்தின் நீளத்தை மேலும் 20 நிமிடங்கள் கூட்டினர். இந்தக் காட்சிகளைச் சேர்த்து புஷ்பா 2 படத்தின் ரீலோடட் பதிப்பு வரும் ஜனவரி 11ம் தேதி முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
புஷ்பா 2 ரீலோடட் மூலம் ரசிகர்களிடம் காட்டுத்தீ மேலும் பற்றவைக்கப்படும்" என்று தயாரிப்பாளர்கள் இந்த அறிவிப்பை வெளிப்படுத்தினர். அத்துடன் சங்கராந்தியை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரும் வெளியிட்டனர். சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கில் மூன்று புதிய படங்கள் வெளியாகவுள்ளதால், புஷ்பா 2 மீதான ஆர்வத்தை இழக்காமல் இருக்க தயாரிப்பாளர்கள் இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.
புஷ்பா 2
சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பா ராஜ் என்ற பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார், அவர் இப்படத்தில் செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவராக மாறியுள்ளார். புஷ்பாவின் மனைவியான ஸ்ரீ வள்ளியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் இதில் மலையாள நடிகர் ஃபஹத் நடித்த போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகமான புஷ்பா 3: தி ராம்பேஜ் என்ற பெயரிடப்பட்டு இந்த அறிவிப்போடு கதை முடிகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்