Allu Arjun: குடும்பத்துடன் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய ஐகான் ஸ்டார்.. மனைவி வெளியிட்ட போட்டா!
Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜூன் தனது 43வது பிறந்தநாளை மனைவி குழந்தைகளுடன் கொண்டாடிய புகைப்படத்தை அல்லு அர்ஜூனின் மனைவி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Allu Arjun: ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் இன்று (ஏப்ரல் 8) தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த பிறகு வரும் பிறந்தநாள் என்பதால் அவருக்கு இது மிகவும் சிறப்பானதாக உள்ளது.
கேக் வெட்டிய அல்லு அர்ஜுன்
43 வது பிறந்தநாளை இன்று குடும்பத்தினருடன் வீட்டில் கொண்டாடினார் அல்லு அர்ஜுன். ஐகான் ஸ்டார் கேக் வெட்டிய புகைப்படங்களை அவரது மனைவி ஸ்நேகா ரெட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர்களது குழந்தைகள் ஆயன், ஆர்ஹா ஆகியோரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பர்த்டே ட்ரீட் கொடுத்த அல்லு அர்ஜூன்
அல்லு அர்ஜுன் அடுத்து இயக்குனர் அட்லியுடன் ஒரு திரைப்படத்தில் AA22 X A6 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க உள்ளார். அந்த திரைப்பட அறிவிப்பு ஐகான் ஸ்டாரின் பிறந்தநாள் விழாவான இன்று (ஏப்ரல் 8) வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்த சிறப்பு வீடியோவையும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அல்லு அர்ஜூன் இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் கதையைத் தொடர்ந்து இயக்குனர் திரிவிக்கிரம் ஸ்ரீநிவாஸுடன் ஒரு புராண கதை சார்ந்த திரைப்படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
புஷ்பா 2 மெகா ஹிட்
அல்லு அர்ஜூன் கடைசியாக நடித்து வெளியான படம் புஷ்பா 2: தி ரூல். இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2024 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரூ. 1,870 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்தியாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஹிந்தியில் புதிய சாதனை படைத்துள்ளது. அந்த அளவிற்கு புஷ்பா 2 திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.
மக்களை ஈர்த்த அல்லு அர்ஜூன்
இயக்குனர் சுகுமார், அதிக எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த திரைப்படத்தை பிரமாண்டமாக இயக்கியுள்ளார். குறிப்பாக, அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. ஜாத்திரா எபிசோட், ஆக்ஷன் காட்சிகளில் ஐகான் ஸ்டாரின் நடிப்பு ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது. திரைப்படத்தில் அவரது தோற்றம், பாணி, ஸ்டைல் அனைத்தும் அவரை மீண்டும் வெற்றி பெற வைத்துள்ளது.
தள்ளுமுள்ளு சம்பவத்தில் சிறை..
புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோவின் போது, கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் தள்ளுமுள்ளு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். அவரது மகன் பலத்த காயமடைந்தார். அந்த ஷோவுக்கு அல்லு அர்ஜுன் வந்ததால் தான் தள்ளுமுள்ளு சம்பவம் நடந்ததாக அவரது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அல்லு அர்ஜுன் ஒரு நாள் சிறையில் இருந்தார். பின்னர் இடைக்கால பிணையில் வெளியே வந்தார். சில நாட்களுக்குப் பிறகு, வழக்கமான பிணையையும் பெற்றார்.
மேலும் படிக்க: தப்பித்த புஷ்பராஜ்.. கைதான அல்லு அர்ஜூன்.. நடந்தது என்ன?
சோதனை காலகட்டம்
இந்த சம்பவம் குறித்து அல்லு அர்ஜுன் மீது சிலர் கடுமையாக விமர்சித்தனர். சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுவனை அல்லு அர்ஜுன் நேரில் சென்று பார்த்தார். இவ்வாறு, ஒரு வருடத்தில் புஷ்பா 2 மூலம் அசத்தும் வெற்றியையும், எதிர்பாராத விதமாக சிறைக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலையையும் அல்லு அர்ஜுன் சந்தித்துள்ளார்.
