Magizh Thirumeni: 10 நாட்கள் 24 மணி நேர உழைப்பு.. ‘கலைத்தாய் கைவிட மாட்டாள் அல்லவான்னு கேட்டார்’.. - மகிழ்
Magizh Thirumeni: கிட்டத்தட்ட 24 மணி நேரம் தொடர்ந்து உழைத்தார். அவருக்கு தூக்கம் என்பது இந்த ஷூட்டிங்கில் இருந்து, அந்த ஷூட்டிங்கிற்கு செல்லும் அந்தப் பயண இடைவெளிதான். - மகிழ் திருமேனி!

Magizh Thirumeni: 10 நாட்கள் 24 மணி நேர உழைப்பு.. ‘கலைத்தாய் கைவிட மாட்டாள் அல்லவான்னு கேட்டார்’.. - மகிழ்
அஜித்தின் அர்ப்பணிப்பு குறித்து மகிழ்திருமேனி டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசினார்.
சமுதாய பொறுப்பு அதிகம்
இது குறித்து அவர் பேசும் போது, ‘அஜித்திற்கு சமுதாய பொறுப்பு மிக மிக அதிகம். அவர் இந்த சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களை மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். அதில் அவருக்கு பல விஷயங்களில் உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான மனப் போக்கு.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தான ஆழ்ந்த கவலை அவருக்கு இருந்ததுதான், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அவரை செய்ய வைத்தது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அவர் போன்ற ஒரு மாஸ் ஹீரோ செய்வதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.