Ajith Kumar: மீண்டும் மேடை.. மீண்டும் வெற்றி.. ஆச்சரியத்தில் கோலிவுட்!- 3 வது இடத்தை பிடித்து சாதனை படைத்த அஜித்குமார்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: மீண்டும் மேடை.. மீண்டும் வெற்றி.. ஆச்சரியத்தில் கோலிவுட்!- 3 வது இடத்தை பிடித்து சாதனை படைத்த அஜித்குமார்!

Ajith Kumar: மீண்டும் மேடை.. மீண்டும் வெற்றி.. ஆச்சரியத்தில் கோலிவுட்!- 3 வது இடத்தை பிடித்து சாதனை படைத்த அஜித்குமார்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 24, 2025 07:32 AM IST

Ajith Kumar: துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸ் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. இந்த நிலையில், இந்தக்குழு இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றது.

Ajith Kumar: மீண்டும் மேடை.. மீண்டும் வெற்றி.. ஆச்சரியத்தில் கோலிவுட்! - 3 வது இடத்தை பிடித்து சாதனை படைத்த அஜித்குமார்!
Ajith Kumar: மீண்டும் மேடை.. மீண்டும் வெற்றி.. ஆச்சரியத்தில் கோலிவுட்! - 3 வது இடத்தை பிடித்து சாதனை படைத்த அஜித்குமார்!

மீண்டும் வாகை சூடிய அஜித்

இதற்காக அஜித்குமார் கார் ரேசிங் என்ற பெயரில் ஒரு கார் ரேஸ் குழுவையும் உருவாக்கினார். இந்தக்குழு பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. முன்னதாக துபாய், பார்சிலோனா, போர்ச்சுக்கல், பிரான்ஸ் நாடுகளில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டிகளில் இந்த அணி பங்கேற்றது.

இதில், துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸ் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. இந்த நிலையில், இந்தக்குழு இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றது.

இந்த போட்டியில் அஜித்குமார் கார் ரேசிங் குழு 3 வது இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது. மார்ச் 21 முதல் 23 வரையில் நடைபெற்ற இந்த ரேஸ் போட்டியில், கார் பந்தய போட்டிகளில் முன்னணியில் இருக்கும் கார் ரேஸ் வீரர்களை தாண்டி, அஜித் குழு 3 வது இடத்தை பிடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இது குறித்து அஜித்குமார் ரேசிங் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டள்ளதாவது, ‘ அஜித் குமாருக்கு மற்றொரு மேடை ஐரோப்பில் அமைந்திருக்கிறது. 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் உட்பட 3 சிங்கங்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அடுத்ததாக பெல்ஜியத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்க இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஏப்ரல் 10 படம் ரிலீஸ்

அஜித்குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் கடந்த மார்ச் 3 ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தப்படத்தின் டீசர் அண்மையில் யூடியூப்பில் வெளியாகி, 24 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்களை சென்று சாதனை படைத்தது. தொடர்ந்து வெளியான படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் ஓஜி சம்பவம் பாடல் உள்ளிட்டவையும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார்.