Ajith and Dhanush: ஏற்கனவே இரண்டு முறை அஜித்துடன் மோதல்.. இப்போ மூன்றாவது தடவை? என்ன செய்ய போகிறார் தனுஷ்
Ajith and Dhanush Clash: 10 ஆண்டுகள் கழித்து மூன்றாவது முறையாக அஜித் - தனுஷ் ஆகியோர் படங்கள் நேரடியாக மோத இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. அஜித்தின் குட் பேட் அக்லி ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அந்த நாளில் தனுஷின் குபேரா வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்குமாரின் விடாமுயற்சி படம் ரிலீஸ் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், அவர் நடித்து வரும் மற்றொரு படமான குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இதனால் விடாமுயற்சி தள்ளி போனதால் துவண்டு போய் இருந்த அஜித் ரசிகர்கள் மீண்டும் குஷி மோடுக்கு வந்துள்ளனர்.
இந்த சூழலில் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படம் ஏப்ரல் மாதம் வெளியாவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது படம் தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திடீர் டுவிஸ்டாக தனுஷ் தற்போது நடித்து வரும் குபேரா படம் ஏப்ரல் 10ஆம் வெளியாகும் என தகவல்கள் உலா வருகின்றன. இதனால் அஜித் - தனுஷ் படங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன் மோதல்
இதற்கு முன்னதாக கெளதம் மேனன் இயக்கத்தில், அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் படம் கடந்த 2015 பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வெளியானது. அப்போது தனுஷ் நடித்த பாலிவுட் படமான ஷமிதாப் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியானது. ஷமிதாப் படம் இந்தி படம் என்றாலும் தமிழிலும் டப் செய்யப்பட்டது. இந்த படத்தில் தான் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் ஹரோயினாக அறிமுகமானார். அத்துடன் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கதாரபாத்திரத்தில் நடித்திருப்பார். பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஆர். பால்கி இயக்கியிருந்த இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார்.