முத்தக்காட்சியில் நடித்ததிற்கு நோட்டீஸ்; ‘இவ்வளவு சீரியஸா எடுத்துப்பாங்கன்னு நினைக்கல’ -ஐஸ்வர்யாராய் த்ரோபேக் பேட்டி!
ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்த தூம் 2 சூப்பர் ஹிட்டானது. ஆனால், படத்தில் ஒரு காட்சிக்காக ஐஸ்வர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்தக் காட்சி என்னவென்று பாருங்கள்.

முத்தக்காட்சியில் நடித்ததிற்கு நோட்டீஸ்; ‘இவ்வளவு சீரியஸா எடுத்துப்பாங்கன்னு நினைக்கல’ -ஐஸ்வர்யாராய் த்ரோபேக் பேட்டி!
நடிகை ஐஸ்வர்யாய்க்கு அறிமுகம் தேவையில்லை. தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் அறிமுகமான இவர் ‘எந்திரன்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஒரு காலக்கட்டத்தில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த ஐஸ்வர்யாராய் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். இவர் 2012 ம் ஆண்டில் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதில் அவர் முத்தக்காட்சியில் நடித்ததிற்காக தனக்கு வக்கீல் நோட்டீஸ் வந்த கதையை பகிர்ந்திருக்கிறார்.
