Aishwarya Rajesh: 'என்ன தான் ஹிட் கொடுத்தாலும் தெலுங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை'.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்
Aishwarya Rajesh: சங்கராந்தி வஸ்துனானு படம் வெற்றி பெற்றாலும் தெலுங்கில் தனக்கு ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Aishwarya Rajesh: ஐஸ்வர்யா ராஜேஷ் சங்கராந்தி வஸ்துனானு படத்தின் மூலம் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிப்பில் வெளியான இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ராம் சரணின் கேம் சேஞ்சர் மற்றும் பாலகிருஷ்ணா தாகு மகாராஜ் ஆகிய படங்களுடன் போட்டியிட்ட இப்படம் பொங்கல் விழா வெற்றியாளராக மாறியது.
முதல் வெற்றி
ஐஸ்வர்யா ராஜேஷ் சங்கராந்தி வஸ்துனானு படத்திற்கு முன்பு தெலுங்கில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி, ரிபப்ளிக் மற்றும் வேறு சில படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அவை எதுவும் அவருக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. சங்கராந்தி வஸ்துனானு திரைப்படத்தின் மூலம் தான் அவருக்கு முதல் வெற்றி கிடைத்தது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் வெங்கடேஷின் மனைவியாக நடித்து மக்களைக் கவர்ந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. வெங்கடேஷுடன் அவர் படத்தில் போட்டி போட்டு நடித்ததாக கூறப்படுகிறது.
ஒரு ஆஃபர் கூட வரவில்லை
இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. அந்தப் பேட்டியில், "தெலுங்கில் எனது சங்கராந்தி வஸ்துனானு படம் வெற்றி பெற்ற போதும் எனக்கு இதுவரை ஒரு பட வாய்ப்பு கூட வரவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்தார். தெலுங்கு மக்கள் தனக்கு வாய்ப்புகளை வழங்க கால அவகாசம் தேவை என்று நினைப்பதாக"வும் அவர் கூறினார்.
நான் கமர்ஷியல் ஹீரோயின் இல்லை
மேலும் "நான் கமர்ஷியல் டைப் ஹீரோயின் இல்லை. அதனால்தான் எனக்கு எந்த வாய்ப்புகளும் வரவில்லை என்று நினைக்கிறேன்" என்றும் கூறியிருக்கிறார். அத்துடன், சங்கராந்தி வஸ்துனானு படப்பிடி்பபு மற்றும் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டதன் காரணமாக சில தமிழ் பட வாய்ப்புகளை நான் தவறவிட்டேன்.
நான் வாய்ப்பு கேட்கவில்லை
தெலுங்கில் இன்னும் நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் நான் அதற்காக யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. அப்படிக் கேட்பது எனக்குப் பிடிக்காது. கிடைக்கும் ஆஃபர்களை கொடுத்துட்டு கிளம்புறேன். தமிழில் பெரும்பாலான இயக்குனர்கள் என்னை மனதில் வைத்து நல்ல கதைகளை எழுதுகிறார்கள்" என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். அவரது இந்த கருத்து வைரலாகி வருகிறது.
ராஷ்மிகாவை பற்றி பேசி சர்ச்சை
முன்னதாக, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படத்தின் புரொமோஷனில் பங்கேற்ற சமயத்தில், "புஷ்பா படத்தில் ராஷ்மிகா.. ஸ்ரீவள்ளி சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு நான் மிகவும் பொருத்தமாக இருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் அவரை விட சிறப்பாக நடித்திருப்பேன்" என்றார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவரது பேச்சுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்திருந்தார். அதில், "தெலுங்கு சினிமாவில் நான் செய்ய விரும்பும் கதாபாத்திரங்களில் எப்படி நடிக்க விரும்புகிறேன் என்று என்னிடம் கேட்கப்பட்டது. தெலுங்கு திரையுலகம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனக்குப் பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் கண்டிப்பாக தெலுங்கு படங்களில் நடிப்பேன் என்று கூறினேன். உதாரணமாக, புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி மாதிரி ஒரு கேரக்டர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக" அவர் கூறினார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள்
தமிழில் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழில் மூன்று படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுழல் வலைத் தொடர் சீசன் 2 வரும் பிப்ரவரி 28ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்