வேற மாறி.. செம ஆட்டம் போட்ட ஜெஃப்ரி.. அன்ஷிதாவை நீச்சல் குளத்தில் தூக்கி போட்டு கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ!
நீச்சல் குளத்தில் ஜெஃப்ரி உடன் சேர்ந்து சத்யா, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா ஆகியோர் உற்சாகமாக குளியல் போட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டை வெளியேறியதும் ஜெஃப்ரி ஜாலியாக தன்னுடைய பிக் பாஸ் நண்பர்களோடு அவுட்டிங் சென்று மகிழ்ந்துள்ளார். குறிப்பாக தர்ஷிகா மற்றும் அன்ஷிதாவை சந்தித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஜெஃப்ரி.
இதுதவிர சத்யாவும் ஜெஃப்ரியின் நெருங்கிய நண்பர் என்பதால், அவர் ஏற்பாடு செய்திருந்த புத்தாண்டு பார்ட்டியில் ஜெஃப்ரியும் கலந்துகொண்டார். குறிப்பாக நீச்சல் குளத்தில் ஜெஃப்ரி உடன் சேர்ந்து சத்யா, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா ஆகியோர் உற்சாகமாக குளியல் போட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஜெஃப்ரி அன்ஷிதா-வை நீச்சல் குளத்தில் தூக்கி போட்டு ஆட்டம் போட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
ஜெஃப்ரியிடம் அறிவுரை
முன்னதாக ஜெஃப்ரி பிக் பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையாக இருந்ததால் அவரை சில வாரங்கள் யாருமே நாமினேட் செய்யவில்லை. அதுமட்டுமின்றி நாமினேஷன் ஃப்ரீ பாஸையும் அவருக்கு அனுதாபத்தில் வழங்கப்பட்டது. இதை கவனித்த விஜய் சேதுபதி, ஜெஃப்ரியிடம் அறிவுரை கூறினார். அதற்கு அடுத்த வாரமே நாமினேஷன் சிக்கிய ஜெஃப்ரி எலிமினேட் ஆனார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை காட்டமாக பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வரும் அவரின் தொகுத்து வழங்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் நிகழ்ச்சி விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
டிஆர்பி ரேட்டிங்கில் சரிவு
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்னும் மூன்று வாரத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ள நிலையில் தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, மஞ்சரி ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
89 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். அதிகபட்சமாக இன்னும் மூன்று வாரங்களில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக இன்னும் சில டபுள் எவிக்ஷன் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்