'எனக்கு என்னை மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்பு.. இது எனக்கு ஒரு ரவுண்ட் 2 மாதிரி': நடிகை வித்யுலேகா உறுதி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'எனக்கு என்னை மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்பு.. இது எனக்கு ஒரு ரவுண்ட் 2 மாதிரி': நடிகை வித்யுலேகா உறுதி!

'எனக்கு என்னை மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்பு.. இது எனக்கு ஒரு ரவுண்ட் 2 மாதிரி': நடிகை வித்யுலேகா உறுதி!

Marimuthu M HT Tamil Published May 16, 2025 02:29 PM IST
Marimuthu M HT Tamil
Published May 16, 2025 02:29 PM IST

‘ தி வெர்டிக்ட்’ டீமிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. இது காமெடி கேரக்டர் கிடையாது. லைட் ஹார்ட்டட் ஒரு நல்ல கேரக்டர் தான்னு சொன்னாங்க’ என நடிகை வித்யுலேகா தி வெர்டிக்ட் திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசியிருக்கிறார்.

'எனக்கு என்னை மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்பு.. இது எனக்கு ஒரு ரவுண்ட் 2 மாதிரி': நடிகை வித்யுலேகா உறுதி!
'எனக்கு என்னை மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்பு.. இது எனக்கு ஒரு ரவுண்ட் 2 மாதிரி': நடிகை வித்யுலேகா உறுதி!

ரொம்ப நாளைக்கு அப்புறம் தி வெர்டிக்ட் திரைப்படத்தில் நடிச்சிருக்கீங்க? அந்தப் படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கு?

கரெக்ட்டாகத் தான் சொன்னீங்க. அது ரொம்ப நாளைக்கு அப்புறம் நடிச்ச படம் தான். கோவிட் டைம், என் திருமணம் எல்லாமே ஒரு சமயத்தில் 2021ஆம் ஆண்டு தான் நடந்தது. இடையில் சில வதந்திகளைக் கிளப்புனாங்க. நான் தமிழ் சினிமாவை விட்டுட்டேன். தெலுங்கு சினிமாவைத்தான் ஃபோகஸ் செய்றேன்னு எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. தெலுங்கில் கேட்டால், இல்லை நீங்க சென்னையில் தான் செட்டில் ஆகிட்டதா சொன்னாங்கன்னு சொல்றாங்க. கடைசியில் நான் நடுவில் சிக்கிக்கிட்டேன். எனக்கு ஒட்டுமொத்தமாக விரக்தியான டைமாக இருந்தது. அப்போது இல்லை நான் நடிச்சிட்டுத்தான் இருந்தேன் அப்படின்னு பலர்கிட்ட சொல்லி, என் பெயரைக் காப்பாத்தினேன்.

அப்போது, ’ தி வெர்டிக்ட்’ டீமிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. இது காமெடி கேரக்டர் கிடையாது. லைட் ஹார்ட்டட் ஒரு நல்ல கேரக்டர் தான்னு சொன்னாங்க. பிறகு, டைரக்டர் நான் பண்ணிடுவேனானு தயங்கினார். அடுத்து நான் அவர்கிட்ட பேசினதும், ‘ நீ தான் இந்த கேரக்டர் பண்ணனும்னு சொல்லி’ கொடுத்தார். இது எனக்கு ஒரு ரவுண்ட் 2 மாதிரி. எனக்கு இது மீண்டும் என்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு. நடுவில் நான் என்னனமோ பண்றேன்னு சொன்னாங்க. அதெல்லாம் கிடையாதுன்னு நான் திரும்பவும் வந்திருக்கேன்.

டைப் காஸ்டிங் எல்லாம் இருக்கு இல்லையா? ஆச்சி மனோரமா ஆகட்டும், கோவை சரளா ஆகட்டும் ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் அதில் இருந்து வெளியில் வரமுடிஞ்சது. நீங்கள் சந்தானத்துக்கூட தொடர்ந்து நடிக்கும்போது, இவங்க தான் அடுத்த ஜோடின்னு பேசப்பட்டது. அது எப்படி நின்னது. நீதானே என் பொன்வசந்தம், வீரம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க இதில் எல்லாம் ஒன்றாக நடிச்சீங்க. ஏன் அந்த ஜோடி நின்னுப்போச்சு?

ஏன் நின்னுப்போச்சு என்றால் சந்தானம் வந்து ஹீரோவாக மாறிட்டார். நான் ஹீரோயினாக மாறலை. அதனால், அந்த காம்போ நின்னுப்போச்சு. வேண்டுமென்றால், அவருடைய அடுத்தடுத்த சினிமாவில் ஒரு பங்காக நடிக்க வாய்ப்பு இருக்கு.

திடீர்னு தெலுங்கில்போய் ரொம்ப பிசியாகிட்டீங்க. அதற்கு காரணமாக என்ன படத்தைப் பார்க்கிறீங்க?

கண்டிப்பாக நீ தானே என் பொன்வசந்தம் படம் தான். அந்தப் படம் அதற்கு இணையாக தெலுங்கி நானி கூட’ ஏதோ வெள்ளிப்போயிந்தி மனசு’ என்னும் பெயரில் தெலுங்கு வெர்ஷனாக எடுக்கப்பட்டது. அதில் நான் நடிச்சதால், அங்கேயும் அடுத்தடுத்து படங்கள் கிளிக் ஆகிடுச்சு.

தெலுங்கு படத்தைப் பொறுத்தவரை, ஒரு படத்தில் 10 காமெடி நடிகர்கள் இருப்பாங்க. அதில் எல்லாம், நான் நடிக்க ஆரம்பிச்சேன். கேரக்டரும் என்னை வைச்சு அங்கு எழுதினாங்க. தமிழிலும் அந்த மாதிரி கேரக்டர்கள் எழுதணும். எத்தனை நாளைக்கு ஒரு காமெடியனை வைச்சே படத்தை நகர்த்துறது’ என நடிகை வித்யுலேகா கூறியிருக்கிறார்.