'40 பென்ச்மார்க்ல 4 கூட வரல' கல்யாண விஷயத்துல என்ன அசிங்கப்படுத்துறீங்க- நச் ரிப்ளை தந்த வனிதா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  '40 பென்ச்மார்க்ல 4 கூட வரல' கல்யாண விஷயத்துல என்ன அசிங்கப்படுத்துறீங்க- நச் ரிப்ளை தந்த வனிதா

'40 பென்ச்மார்க்ல 4 கூட வரல' கல்யாண விஷயத்துல என்ன அசிங்கப்படுத்துறீங்க- நச் ரிப்ளை தந்த வனிதா

Malavica Natarajan HT Tamil
Published Apr 23, 2025 07:20 PM IST

நான் 40 கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிருக்கேன். ஆனா என் பென்ச் மார்க்ல இன்னும் 4 கூட வரல என நடிகை வனிதா விஜயகுமார் நக்கல் கேள்விக்கு நச்சென பதில் அளித்துள்ளார்.

'40 பென்ச்மார்க்ல 4 கூட வரல' கல்யாண விஷயத்துல என்ன அசிங்கப்படுத்துறீங்க- நச் ரிப்ளை தந்த வனிதா
'40 பென்ச்மார்க்ல 4 கூட வரல' கல்யாண விஷயத்துல என்ன அசிங்கப்படுத்துறீங்க- நச் ரிப்ளை தந்த வனிதா

பெண்கள் செய்யும் தவறுகளும் சுட்டிக்காட்ட வேண்டும்

அப்போது, செய்தியாளர்களை சந்தித்து வனிதா விஜய குமார் பேசியுள்ளார். அதில், "பொதுவாக பெண்கள் முன்னேற்றம், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி தான் படங்கள் வருகிறது. இங்கு நிறைய பேர் பெண் என்ற அடையாளத்தை பயன்படுத்தி தவறுகளும் செய்கிறார்கள். அவர்களை மையப்படுத்தி தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. என் வாழ்க்கையில் நானே எத்தனையோ பெண்களை இதுபோல் சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு கோபம் வரும். பெண்களா இருந்தாலும் தப்பு பண்ணா தண்டனை கிடைக்கனும்.

பெண்கள் தப்பு பண்றதே இல்லையா?

இந்த சொசைட்டியில பெண்கள உயர்த்தி பிடிச்சிட்டே இருக்காங்க. என்னதான் இருந்தாலும் அவங்க செய்யுற தப்பையும் நாம தான் சொல்லனும். இந்தப் படத்துல ஒரு நல்ல மெசேஜ் சொல்லி இருக்காங்க. பெண்களுக்கு எதிரான படம் இது இல்ல. ஆனா பெண்கள் மேல இருக்க தப்பையும் ஏத்துகிட்டு தான் ஆகணும். இந்த உலகத்துல பெண்கள் தப்பே பண்றது இல்லையா. பண்றாங்க. கண்டிப்பா பண்றாங்க என வனிதா பேசினார்.

வனிதா பண்ணா சரியா?

இவரைத் தொடர்ந்து கயல் சீரியலில் வில்லன் கதாப்பாத்திரமான சரவண வேலுவாக நடித்து வரும் நடிகர், நாட்டில் 99.9 சதவீதம் நல்ல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், 0.001 சதவீதம் கெட்ட பெண்களும் இருக்கிறார்கள். அந்த பெண்களின் செயல்களால் தான் எல்லாருக்கும் கெட்ட பெயர் வருது. சமீபத்தில் கூட திருமணமான ஒருத்தரோட போட்டோ போட்டு என ஆரம்பிக்கும் போதே செய்தியாளர் ஒருவர் வனிதா பண்ணுனா சரி நான் பண்ணா தப்பா என பேசி இருந்தார். இதைக் கேட்ட வனிதா எவன்டா சொன்னது சரி என சிரித்துக்கொண்ட கேள்வி எழுப்பினார்.

40 கல்யாணம் பண்ணுவேன்

அத்தோடு நான் 40 கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லிருக்கேன். நான் 4 கூட இன்னும் பண்ணல. என் பென்ச் மார்க்கே இன்னும் வரல. அதுக்குள்ள என்ன அசிங்கப்படுத்துறீங்களா? என கேள்வி எழுப்பியவரிடம் நக்கலாக பேசினார். அப்போது அந்த நடிகர், இதை நான் சொல்லவில்லை என்பதை பதிவு செய்வதற்காக கூறினேன் என சமாளித்தார். பின், வனிதாவுடன் பழகியவர்களுக்கு தான் தெரியும் இவர் எவ்வளவு அன்பானவர் என்று. சோசியல் மீடியாவில் ஆயிரம் பேசலாம், ஆணால், உண்மை எங்களுக்குத் தான் தெரியும் என்றார்.

6 வருட போராட்டம்

மேலும் எனக்கு திருமணமாகி விவாகரத்திற்காக 6 வருஷமா கோர்ட்டில் அலைகிறேன். எனக்கான நீதி அங்கு கிடைக்கவில்லை. என் தரப்பு நியாயம் என்ன ஆவது. பெண்ணாக இருப்பதால பலருக்கு அட்வான்டேஜ் இருக்கு எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அலெர்ட் படம்

அலெர்ட் படத்தில் நடிகர் இனிகோ பிரபாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா தத்தா, சேகர் சேதுராமன், சூசன், வினோத் முன்னா போன்றோர் நடித்துள்ளனர். சேகர் சேதுராமன் தயாரிப்பில் ரவி சுப்ரமணியன் இயக்கியுள்ள இந்தப் படம் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேசுவதாகக் கூறப்படுகிறது.